சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) மாநாட்டிருக்கு செல்வதற்கு முன்பாக மயக்கமடைந்து உயிரிழந்தார்.
நேற்று இரவு சென்னையில் இருந்து நண்பர்களுடன் வேனில் புறப்பட்ட பிரபாகரன் சற்று முன்னதாக மதுரை சக்கிமங்கலம் அருகே வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார்.
சிறுநீர் கழிக்க சென்ற பிரபாகரனை காணவில்லை என நண்பர்கள் தேடிச்சென்ற பொழுது பிரபாகரன் மயக்க நிலையில் காணப்பட்டார்.
இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
