Headlines

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மழையால் மலைக்குன்றின் மீது இருந்த ராட்சத பாறை சாலை நடுவில் சரிந்து விழுந்து வாகன போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மழையால் மலைக்குன்றின் மீது இருந்த ராட்சத பாறை சாலை நடுவில் சரிந்து விழுந்து வாகன போக்குவரத்து பாதிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் தெற்கு மில்லத் நகர். இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாலை ஓரம் முனியப்பன் என்பவர் வீட்டின் அருகில் மலைக்குன்றின் மீது ராட்சத பாறை இருந்துள்ளது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழை காரணமாக ராட்சத பாறை ஒன்று மண் சரிந்து விழுந்து சாலை நடுவில் நின்றுள்ளது. இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் சாலை இருபுறம் வீடுகள் இருந்தாலும் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதமின்றி ராட்சத பாறை சாலை நெடுவில் நின்றுள்ளது.

இதனால் அவ்வழியாக செல்லும் அனைத்து நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலை நடுவில் உள்ள ராட்சத பாறையை உடனடியாக அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அப்பகுதியில் ஆபத்தான உள்ள ராட்சத பாறைகளை அகற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிருபர் அப்சர் மர்வான் திருப்பதூர் மாவட்டம்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *