மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பதவி விலகும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
மதுரை மாநகர மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மண்டலத் தலைவர்கள் விலக ஆணை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி இடையே நிலவும் கோஷ்டி பூசலால் நடவடிக்கை எனத் தகவல். தேவைப்பட்டால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.
மதுரை மாநகராட்சியில் சுமார் 150 கோடி அளவிற்கு நடைபெற்ற வரிக்குறைப்பு மோசடி புகாரில் ஆளுங்கட்சியின் மண்டல தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அனைத்து மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதல்வர் உத்தரவு.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
