கூட்டுறவுத்துறை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் – குன்னூர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் குன்னூர் இரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்றது.

இந்த முகாமில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அத்துடன் ஏதேனும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டு, கண் மற்றும் கண் கண்ணாடி பராமரிப்பு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த முகாமினை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் துவங்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
முகாமில் கூட்டுறவு ஒன்றிய பணியாளர்கள், பார்வை மருத்துவர் திரு. ஆரூப், மக்கள் தொடர்பு அலுவலர் (தி ஐ ஃபவுண்டேஷன்) பாபு, செவிலியர் திருமதி. கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
