Headlines
தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! நடைபெற்றது...

தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! நடைபெற்றது…

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே தமிழகத்தில் பெருகிவரும் பாலியல் சீண்டல், போதை பொருள் நடமாட்டம், சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக மற்றும் விழுப்புரம் மாவட்ட மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் சி.வி சண்முகம் எம்பி தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள் ஆகியோர்…

Read More
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு..

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையின் 5 ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொழிற்சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், மக்களின் நாயகன் டாக்டர். R. சொக்கர் தலைமையில் 16/11/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.

Read More
குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்...

குமரி கிழக்கு மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா – தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிறப்பான கொண்டாட்டம்…

நாகர்கோவில்; நவ. 14 தமிழக வெற்றிக் கழக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் SR. மாதவன் அவர்கள் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுடன் உரையாற்றிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் சாதனைகள், குழந்தைகளிடம் அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் மேம்பாட்டில் உள்ளது என்ற…

Read More
குமரி மாவட்டம் குட் ஷெப்பர்ட் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின சிறப்பு விழா...

குமரி மாவட்டம் குட் ஷெப்பர்ட் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின சிறப்பு விழா…

குமரி மாவட்டம் நாகர்கோவில் குட் ஷெப்பர்ட் மேல்நிலைப்பள்ளியில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவர்களுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன. மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவிற்கு தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற ஜார்ஜ் அவர்கள் தலைமையேற்றார். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். பல பெற்றோரும் கலந்து…

Read More
பாஜக தொழில் வல்லுநர்கள் பிரிவின் ஆலோசனைக் கூட்டம்...

பாஜக தொழில் வல்லுநர்கள் பிரிவின் ஆலோசனைக் கூட்டம்…

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் தொழில் வல்லுநர் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் பிரிவின் மாநில தலைவர் சுந்தர்ராமன் தலைமையில் நடைபெற்றது. ஜிஎஸ்டி மறுசீராய்வு மூலம் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது என்றும் அக்கூட்டத்தில் ஜிஎஸ்டி மறுசீராய்வு குறித்து கையேடு பிரிவின் மாநில தலைவரால் வெளியிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இதில் ஜிஎஸ்டி 4 பிரிவுகளாக இருந்தது. அதனை மக்களின் நலன் கருதி மத்திய அரசு நிதி அமைச்சர்…

Read More
திருநெல்வேலி பாளையங்கோட்டை, அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற, 58-வது தேசிய நூலக வார விழா! தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்!

திருநெல்வேலி பாளையங்கோட்டை, அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற, 58-வது தேசிய நூலக வார விழா! தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்!

திருநெல்வேலி,நவ.13:- தமிழ்நாடு அரசு “பொது நூலகத்துறை”யின் கீழ், பாளையங் கோட்டையில் இயங்கி வரும், மாவட்ட மத்திய நூலகம், அந்நூலகத்தின் வாசகர் வட்டம் ஆகியன இணைந்து, இன்று (நவம்பர்.13) மாலையில், 58-வது தேசிய நூலக வார விழாவை, நூலக அரங்கில் நடத்தின. இதனையொட்டி, “நூல்கள் கண்காட்சி” ஒன்றும் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் அ.மரிய சூசை தலைமை வகித்தார், துணைத்தலைவர் “கவிஞர்”கோ. கணபதி சுப்பிரமணியன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சி சுந்தரம், முதன்மை…

Read More
உடுமலையில் பூட்டிய கோவிலை திறக்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மணுகொடுக்க திரண்ட பொதுமக்கள்..

உடுமலையில் பூட்டிய கோவிலை திறக்க கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மணுகொடுக்க திரண்ட பொதுமக்கள்..

உடுமலைநவம்பர் 13. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெரியவாளவாடியில் உள்ள பூட்டபட்ட 5 கோவில்களை திறக்ககோரி வருவாய்கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியவாளவாடி கிராமத்தில் முருகன் கோவில் விநாயகர் கோவில் மாரியம்மன் கோவில் ரேனுகா தேவி கோவில் உச்சிமாகாளியம்மன் கோவில் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளதாகவும் இதனை சின்னராஜ் நாயக்கர் தேவராஜ் மற்றும் லட்சுமி நாராயனன் என்பவர்கள் பரம்பரை பரம்பரையாக திருகோவிலை பராமரித்து வருவதாகவும் இதனிடையே கோவில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டசிலர்…

Read More
உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலைநவம்பர் 13. உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் துணை மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணியின் நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதை ஒட்டி பூலாங்கிணர் .அந்தியூர், ஜீவா நகர். முக்கோணம் , சடைய கவுண்டன்புதூர். பாப்பனூத்து. வாளவாடி,தளி. மொடக்குபட்டி, ஆர் வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை .மங்களாபுரம். விளாமரத்து பட்டி, உடுக்கம்பாளையம். கஞ்சம்பட்டி, குண்டலபட்டி, லட்சுமாபுரம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம்…

Read More
ஜாக்டோ ஜியோ- பிரச்சார இயக்கம் இரு இடங்களில் நடந்தது..

ஜாக்டோ ஜியோ- பிரச்சார இயக்கம் இரு இடங்களில் நடந்தது..

உடுமலைநவம்பர் 13. ஜாக்டோ -ஜியோ சார்பில் தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்ற கோரி உடுமலை மடத்துக்குளம் அரசு அலுவலகங்கள் முன்பு பிரச்சார இயக்கம் நடந்தது. இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி…

Read More
உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் மாணவர்களுக்கு வேளாண்மை பயிற்சி..

உடுமலை அருகே உள்ள மானுப்பட்டியில் மாணவர்களுக்கு வேளாண்மை பயிற்சி..

உடுமலைநவம்பர் 13. உடுமலை அருகே உள்ள மானுப் பட்டியில் உள்ள அகரம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு இலவச இயற்கை விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் காங்கேயம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து அட்மா திட்டத்தின் கீழ் காங்கேயம் மற்றும் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் பாலகுமார் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதுஸ்ரீ,சுகன்யா, ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள். அப்போது…

Read More