Headlines
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் ரா வாய்க்காலின் குறுக்கே பாசன குழாய் பதிப்பு அதிகாரிகள் ஆய்வு…

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் ரா வாய்க்காலின் குறுக்கே பாசன குழாய் பதிப்பு அதிகாரிகள் ஆய்வு…

உடுமலை, நவம்பர் 13. உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் விதிகளை மீறி ராஜவாய்க்காலின் குறுக்கே குழாய் பதித்து,வணிகப் பயன்பாட்டுக்கு தண்ணீர் கொண்டு செல்வதாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில்,குத்தகை அடிப்படையில் பல விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் தனி நபர் ஒருவர் குழாய்களை பதித்து வணிகப் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதாக…

Read More
வாய்க்கால் வழியாக வயல்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்..

வாய்க்கால் வழியாக வயல்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்..

உடுமலைநவம்பர் 13. பாசன வாய்க்கால்களில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படும் குப்பைகளால்,பாசன நீருடன் கலந்து விளைநிலங்களில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாயிகள் கண்ணீர் விடும் நிலை உள்ளது. ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..!! இப்பயிரை கண்ணீரால் காத்தோம்’ என்ற பாரதியின் சுதந்திரப் போராட்ட கால வரிகள்,இன்றைய விவசாயிகளின் நிலைக்கு பொருந்துகிறது. பல போராட்டங்களுக்கு மத்தியில் பயிரை கண்ணீர் விட்டு காக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பருவமழை கைவிட்டால் பாசன நீர் கிடைக்காமல் பயிர்கள் காயும் நிலை ஏற்படும்.ஆனால்…

Read More
திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருநெல்வேலி,நவ.13: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான, “விமன் இந்தியா மூவ்மெண்ட்” ( WOMEN INDIA MOVEMENT) அமைப்பின்,”செயற் குழு கூட்டம்” இன்று ( நவம்பர்.13) மாலையில், நகர தலைவி ஹமீதா அக்பர் தலைமையில், நடைபெற்றது. நகர செயலாளர் ஜன்னத், அனைவரையும் வரவேற்று பேசினார். இணை செயலாளர் ஜெஸிமா, முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட,…

Read More
புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.கந்தசாமி அவர்களின் மேற்பார்வையில் விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் கெங்கராம்பாளையம் சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது தெரியவந்து கார் மற்றும் எதிரிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம்…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி!

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி!

திருநெல்வேலி,நவ.13:-தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் உத்தரவின் பேரில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள், மாவட்ட காவல் துறையினரால், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடுகின்ற வழிபாட்டுத்தலங்கள், தினசரி சந்தைகள், எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கும் கடைவீதிகள்,பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள்- என அனைத்து இடங்களிலும், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாதவாறு, மாவட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில்,…

Read More
கடலூர் பஸ் மோதி பரிதாப பலி

கடலூர் பஸ் மோதி பரிதாப பலி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்தில் இருந்து அண்ணாகிராமம் செல்லும் சாலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது பேருந்து மோதி விபதுக்குள்ளனது. இதில் படுக்காயம் அடைந்த நபர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்ட நிருபர் R. விக்னேஷ்

Read More
நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபாதை பணியில் பாரபட்சம், பெரு வணிகர்களுக்குச் சலுகை – சிறு வியாபாரிகளுக்குச் சுமை.

நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபாதை பணியில் பாரபட்சம், பெரு வணிகர்களுக்குச் சலுகை – சிறு வியாபாரிகளுக்குச் சுமை.

மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் வெளியிட்ட தீவிர கண்டன அறிக்கை நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் தலைமையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தப் படியில், சவேரியார் கோயில் சந்திப்பிலிருந்து செட்டிக்குளம் வரை நடைபாதை மற்றும் வண்ணக் கற்கள் பதிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஒப்பந்ததாரர் தியாகராஜன் மேற்கொண்டு வருகிறார். ஆனால் இங்கே கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது……

Read More
கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை..!

கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை..!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த கறிக்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தமிழ்ச்செல்வன் வயது (34). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த முத்தமிழ்ச்செல்வன் நேற்று தனது வீட்டின் மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட நிருபர்R. விக்னேஷ்

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலி தொழிலாளி!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலி தொழிலாளி!

திருநெல்வேலி,நவ.12:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள “சிதம்பராபுரம்” பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது.30). தினக்கூலி தொழிலாளியான இவர், சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தெரு நாய், இவரை கடித்தது. இதை ஐயப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், வழக்கமாக வேலைக்கு சென்ற ஐயப்பனின் உடல்நிலை, திடீரென மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐயப்பனை, அவருடைய குடும்பத்தினர், நாகர் கோவில் அருகே, “ஆசாரிப்பள்ளம்” என்னும் இடத்தில் அமைந்துள்ள,…

Read More
குளச்சலில் 2 வாகனங்களில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

குளச்சலில் 2 வாகனங்களில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி : நவம்பர் 12. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் பறக்கும் படை மேற்கொண்ட ரோந்து பணியின் போது, பெருமளவு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குளச்சல் அருகே இன்று (12ம் தேதி) அதிகாலை நடைபெற்ற சோதனையில், கேரளா பதிவு எண்ணுடன் வந்த சொகுசு காரில் சுமார் 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், குளச்சல் வாட்டர் டாங்க் அருகே சோதனைக்குட்பட்ட மற்றொரு காரில் 500 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது….

Read More