பழனியருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை நடைபெற்று வருவதாக பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது . .எனவே ஆயக்குடி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சார்பு ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னதாக ஆயக்குடி பகுதியில் நடைபெற்ற சோதனையில் திண்டுக்கல்லில் இருந்து கேரளா மாநிலகள்ள லாட்டரிகள் ஆயக்குடிக்கும் மற்றும் பழனி பகுதிகளுக்கும்…
