திருநெல்வேலியில், போதை பொருட்களுக்கு எதிராக, மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய, மாநகர காவல் துறையினர்!
திருநெல்வேலி,நவ.21:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாஉத்தரவின்படி, மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, G.S.அனிதா (தலைமையிடம்) மற்றும் S.விஜயகுமார் (கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், இன்று திருநெல்வேலி சந்திப்பு காவல் ஆய்வாளர் பொன்ராஜ், சந்திப்பு ம.தி.தா இந்துககல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும், தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர்…
