பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிப்பு பணிகளுக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நகரின் மத்தியில் அமைந்துள்ள வ.உ.சி மத்திய பேருந்துநிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பழனி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பூங்காவானது பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்றது. பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள்…
