Headlines
தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்.

தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்.

திண்டுக்கல் மாவட்டம் தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தெய்வம் ஏ டி எஸ் பி தலைமையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தார் பேரணி மகளிர் காவல் நிலையத்தில் துவங்கி திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துமனையில் நிறைவு பெற்றது. தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் தலைவர் அருண்குமார் முன்னிலையில், மருத்துவர்.பிரியா ,குருதி வங்கி பொருப்பாளர் தலைமையில் ரத்ததான முகாம் மருத்துவ மனை குருதிதான வங்கி மையத்தில்…

Read More
பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது இல்லா வாழ்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மது ஒழிப்போம், தீண்டாமை ஒழிப்போம் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. மேலும் மது அருந்துபவர்கள் கழகத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் வின்னர் மணி ,மாவட்டம் மகளிர் அணி பொறுப்பாளர் ஈஸ்வரி ,மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பாஸ்கரன்…

Read More
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி.

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி.

இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பரிசு வழங்கப் படுகிறது.எழுதுவதின் மகிழ்வு: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில் கடிதத்தை எழுதலாம்.கடிதங்கள் 18 வயதுக்குட்பட்ட நபர்கள் , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்….

Read More
இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை.

இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை.

பழனி கீதா கண் மருத்துவமனை சார்பில் இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை அளிக்க முடிவு. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள்‌. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : ராஜ் மேலாளர், கீதா கண் மருத்துவமனை. பழனி. செல் : 8122271418

Read More
காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமை மற்றும் அனுமதிச்சட்டம்) 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுக்கடைகள் 2-ம் தேதி (புதன்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும் அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். பழனி செய்தியாளர் நா.ராஜாமணி

Read More
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடக்கப் போவதாக கௌரவ தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடக்கப் போவதாக கௌரவ தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாந்தி, கௌரவ தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எந்த ஒரு நிபந்தனையின்றி பணி வழங்க வேண்டும். திண்டுக்கல் பாளையம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பணியாளருக்கு…

Read More
பழனி அருகே திமுக சார்பில் துணை முதல்வர் பதவியேற்றதற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

பழனி அருகே திமுக சார்பில் துணை முதல்வர் பதவியேற்றதற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி திமுக பேரூர் இளைஞர் அணி சார்பில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தமிழகத் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் பிரபாகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன் ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆயக்குடி பேரூர் செயலாளர்…

Read More
பழனியில் பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

பழனியில்பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோவில் பின்புறம் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் TN20 CP. 7129 சாமி செப்டிக் டேங்க் என்ற பெயர் கொண்ட செப்டிக் டேங்க் லாரி மூலமாக கழிவுநீரை நகர்புறங்களில் உள்ள பொதுவெளியில் வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வீடியோவில் உரையாடும் நபர் இது வெறும் கை கழுவும் தண்ணீர் தான் பழனி தேவஸ்தானம் மூலம் இந்த தண்ணீரை அகற்றி வருகிறோம் என்பதாக கூறியுள்ளார்….

Read More
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.!

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.!

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27 நாளான இன்று உலக சுற்றுலா தினவிழா தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுலா தின விழாவானது திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி மலையில் நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழா நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார்…

Read More
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

காரத்தொழுவுஅரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் போட்டியில் முதலிடம்.!

திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹேண்ட் பால் (கைப்பந்து) போட்டியானது உடுமலை எஸ்கேபி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிகளுக்கான மாணவர்கள் பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி காரத்தொழுவு மாணவர்கள் முதலிடம் பெற்றனர். மேலும் மாநில அளவிலான போட்டிக்கு மாணவர்கள் தேர்வாயினர். பயிற்சி கொடுத்த ஆசிரிய பெருமக்கள் விஜயன் மற்றும் கார்த்திகேயன் அவர்களுக்கும் வெற்றி பெற்ற பள்ளியின் மாணவர்களுக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு…

Read More