நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டத்தில், பாபனாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய, 3 அணைகளில் இருந்து, ஒரே நேரத்தில் தண்ணீர் திறப்பு! தமிழக சபாநாயகர் அப்பாவு, திறந்து வைத்தார்!
திருநெல்வேலி, அக்.28:-திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபனாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளில் இருந்தும், இன்று [அக்.28] காலையில் ஒரேநேரத்தில், நடப்புப் பிசானப்பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழக சட்டமன்ற பேரவைத்தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர், இந்த அணைகளில் இருந்து முறைப்படி தண்ணீரை, திறந்து வைத்தார். இந்த அணைகளின் கீழுள்ள, வடக்குக் கோடை மேல் அழகியான், தெற்கு கோடை மேல் அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 7…
