Headlines
ஒன்றிய அரசை கண்டித்து, திருநெல்வேலியில் நடைபெற்ற மறியல் போர்! நூற்றுக் கணக்கணக்கானோர் பங்கேற்று, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்!

ஒன்றிய அரசை கண்டித்து, திருநெல்வேலியில் நடைபெற்ற மறியல் போர்! நூற்றுக் கணக்கணக்கானோர் பங்கேற்று, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்!

திருநெல்வேலி, ஜூலை.9:- ஒன்றிய அரசே !மோடி அரசே! தொழிலாளர் விரோத, நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறு !பொதுத்துறை நிறுவனங்களில், அவுட்சோர்சிங் முறையைக் கைவிடு !விலைவாசியைக் கட்டுப்படுத்து !பொதுத்துறை நிறுவனங்களில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி விடு!வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்துக் கட்டு ! மக்கள் விரோத, புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு!- ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி,அகில இந்திய பொது வேலை நிறுத்தம் போராட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் [சி.பி.ஐ. எம்.எல்] கட்சியின் சார்பாக, திருநெல்வேலி…

Read More
முதல்வர் மருந்தகங்களில் மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு - விற்பனையை அதிகரிக்க அறிவுரை வழங்கினார்

முதல்வர் மருந்தகங்களில் மண்டல இணைப்பதிவாளர் ஆய்வு – விற்பனையை அதிகரிக்க அறிவுரை வழங்கினார்.

கேத்தி பாலாடாவில் செயல்பட்டு வரும் கெம்பையாடா தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச்சங்கத்தால் நடத்தப்படும் முதல்வர் மருந்தகம் மற்றும் சாந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனிநபர் தொழில்முனைவோரால் நடத்தப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் ஆகிய மருந்தகங்களை நீலகிரி மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு .இரா.தயாளன் நேரில் ஆய்வு செய்து விற்பனையை அதிகரிக்க அறிவுறுத்தினார். நியாயவிலைக்கடைகள் மூலம் முதல்வர் மருந்தக மருந்துகள் மற்றும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் விலை விவரங்களை ஒப்பீடு செய்து துண்டறிக்கைகள் அச்சிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மறியல் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மறியல் போராட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 17 அம்சங்களை கோரி வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது. SFl. நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டன உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர்கள் அவர்களை சிறை பிடித்தனர் பல்வேறு அம்சங்களை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி

Read More
தேனியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தேனியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தேனியில் ரயில் மறியல் போராட்டம் பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு எதிராகவும்! போராடி பெற்ற சட்டங்களை கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தச் சட்டம் கொண்டு வந்த ஒன்றிய மோடி அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு தேனியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் எம். ராமச்சந்திரன் சிஐடியு மாவட்ட செயலாளர், எம் எஸ் பி ராஜ்குமார் எஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர், சர்க்கரை. எம். முருகன்…

Read More
மதுரையில் வேலை நிறுத்த போராட்டம்.

மதுரையில் வேலை நிறுத்த போராட்டம்.

தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் மதுரையில் நம்மவர் தொழிற்சங்கம் சார்பில் மக்களின் நாயகன் சொக்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
பந்தலூர் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல்.

பந்தலூர் அருகே தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல்.

தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போர் நடைபெற்றது. இந்த நிகழ்வில் Citu தொழிற்சங்கம் ஆசா workers, மின் ஊழியர்கள். சுமைதூக்கும் தொழிளார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பொது வேலை நிறுத்தம் தொடர்பாக கோசங்கள் எழுப்பிய நிலையில் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Read More
திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

நீலகிரி மாவட்டம் இளைஞர் அணி சார்பில். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாள் முன்னிட்டு திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் குன்னூர் நகரம் சார்பாக கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.

Read More
ஆம்பூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது.

ஆம்பூர் அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று உடைய ராஜபாளையம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில், வீட்டிலிருந்த அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்த போது, சுமதி மற்றும் அவரது கணவர் சத்யராஜ் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த…

Read More
"ஓரணியில் தமிழ்நாடு" – வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது!

“ஓரணியில் தமிழ்நாடு” – வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது!

“மண், மொழி, மானம் காத்திட – ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி, கெம்பட்டி பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன் மற்றும் வார்டு செயலாளர் நா.தங்கவேலன் தலைமையில் வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், பூத் எண்: 208 பகுதிகளில் உள்ள குப்பண்ண தோட்டம், காட்டேரி தோட்டம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் செயலாற்றிய மக்களுக்கான திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில்…

Read More
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாழும் மனித நேயம்

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாழும் மனித நேயம்.

மதுரை சமூக ஆர்வலர் சேக் மாஸ்தன் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி அவர்களின் கோரிக்கையை ஏற்று கீதா மதன் அவர்களின் சார்பாக மாணவனுக்கு பள்ளி சீருடை மற்றும் படிப்புக்கு தேவையான உபகரணங்களை பார்வையற்ற தாயின் பொருள் கேட்டதை அடுத்த மாற்றுத்திறனாளி அவர்களின் கோரிக்கையை ஏற்ற சமூக சேவகர் சேக் மாஸ்தன் மாணவனுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினார். மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More