வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை.
வாணியம்பாடி, சென்னையை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ரோகினி (வயது 30) என்பவருக்கு திருமணம் முடிந்து இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. ராஜேஷ் கேரளாவில் பால் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ராஜேஷின் தந்தை பார்ப்பதற்காக திருச்சூரில் இருந்து கணவன் மனைவி இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டனர். ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது…
