திருநெல்வேலியில் நடைபெற்ற, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! அலுவலர் கொடி அசைத்து துவக்கி வைத்த, மாவட்ட வருவாய் அலுவலர்!
திருநெல்வேலி,டிச.17:- பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை முன்பிருந்து, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை, இன்று (டிசம்பர்.17) காலையில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சிமொழிச்சட்டம் இயற்றப்பட்ட 1956- ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதியினை நினைவு கூறிடும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்மொழி ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா இன்று ( டிசம்பர்.17) முதல், ஒருவார காலம் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான இன்று ( டிசம்பர்.17) காலையில்,…
