வனத்துறை தொடர்பான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்றது.
வனச்சரக அலுவலர்கள் மணிகண்டன் (உடுமலை) புகழேந்தி(அமராவதி) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உடுமலை,மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.அப்போது விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகளில் குரங்கு, மயில்,காட்டுப்பன்றி உள்ளிட்டவை மலை அடிவாரம் மற்றும் சமதளப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது.குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மரங்களில் இளநீர் மற்றும் குரும்பைகள் உள்ளிட்டவற்றை பிடுங்கி கீழே போட்டு விடுகிறது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போன்று பல லட்சம் ரூபாய்…
