Headlines
ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

ஆம்பூர் அருகே முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி பிரேக் போட்டதால், கண்டெய்னர் லாரி மற்றும் மொரம்பு ஏற்றி வந்த லாரிகள் அடுத்தடுத்து மோதி தேசிய நெடுஞ்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து. போக்குவரத்து பாதிப்பு.

வாணியம்பாடி, அக்.19- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டைனர் லாரி முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் பின்னால் கதவாளம் பகுதியில் இருந்து மொரம்பு மண் ஏற்றிக்கொண்டு மாதனூர் நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் கன்டெய்னர் லாரி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், மொரம்பு மண் ஏற்றி வந்த லாரி எதிர் திசையில் சென்று சென்னை பெங்களூர் தேசிய…

Read More
பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!

பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை!

பழனியருகே அ. கலையம்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் மேற்கூரை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் எந்த நேரத்தில் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து மேலே விழும் என்ற உயிர் பயத்தின் அச்சத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.

Read More
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவிற்கு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் முதல் பருவத்தேர்வு, காலாண்டு தேர்வில் சிறப்பாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகிர்…

Read More
பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

பழனி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன் அடிப்படையில் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் ,கீரனூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார், தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கோதை மங்கலத்தைச் சேர்ந்த அம்ஜத் கானிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 16 கிலோ அளவுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மரவள்ளி கிழங்கு பயிரிடும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலையை குறைத்து இருப்பதை கண்டித்தும், மரவள்ளி கிழங்குக்கு நியாயமான விலை கிடைத்திடவும், கள்ளக்குறிச்சியில் சேகோ பேக்டரி அமைத்து தரக்கோரியும் மனு அளித்தனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பாயிண்ட்டுக்கு ரூபாய் 350 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு டன் கிடங்கு கொள்முதல் பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் வரை பெற்று வந்தனர் . இந்த நிலையில் தற்போது ஒரு பாயின்டின் விலை…

Read More
திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.

திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் தேர்வு.

திருப்பத்தூர் மாவட்ட அரசு காஜியாக மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்களை தமிழக அரசு G.O. (D). 59/2024 ன்படி தேர்வு செய்துள்ளது அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்.இ.ஆ.ப., அவர்களை மாவட்ட அரசு காஜி மௌலவி. சையத் அப்துல் ரஹ்மான் மாதனி அவர்கள் மரியாதை நிமித்தமாக காஜி கமிட்டி குழுவுடன் சந்தித்து சால்வை போர்த்தி நினைவாக தமிழ் குர்ஆன் வழங்கினார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட அரசு காஜி…

Read More
வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.

வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.

தென்காசி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயற்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளார். எவ்விதமான உதவியும் எதிர்பார்த்து செய்யாமல் தனது மன மகிழ்விற்காக இப்பணிகளை செய்து வருகிறேன் என்று கூறி வரும் இவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் பனை விதை நடுதலில் அவரின் ஆர்வம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது பொதுமக்களின் நலனுக்காக பனைமரம்…

Read More
பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை புரிந்தார். தனித்தனியாக வந்த இருவரும் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது வரவேற்கத்தக்கது. இந்து மக்கள் உணர்வு குறித்து விஜய் உணர்ந்ததைப் போல விரைவில் தமிழக முதலமைச்சரும் உணர்ந்து இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உதயநிதியை முன்னிலைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளனர் என்றும், கடந்த வருடம் பருவ மழையின் பொழுது சென்னை தத்தளித்த போது, 4000 கோடி ரூபாய் செலவு செய்ததாக விவகாரம் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் பருவமழை பெய்யத்துவங்கி உள்ளது. இதில் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில், அந்த 4ஆயிரம் கோடிரூபாய் நிதி விவகாரம் குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கமளிக்க வேண்டுமெனவும், பாஜக மாநாடு நடத்தினாலோ, த வெ க மாநாடு நடத்தினாலும் 21கேள்விகள் உள்பட பல விதிமுறைகளை காவல்துறை விதிக்கிறது. சென்னையில் ராணுவம் விமான சாகசம் நடத்தினால், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி சொல்கிறார். ஆனால் திமுக மாநாடு நடத்தினால் 21 கேள்விகளும் கேட்பதில்லை, விதிமுறைகளும் விதிப்பதில்லை, திமுக மாநாட்டிற்கு கூட்டம் கூடாமல் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்வதில்லை எனவும் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சனம் செய்தார். தொடர்ந்து மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடு எடுப்பதாகவும், தனியார் பள்ளிகளில் வசதி உள்ள குழந்தைகள் மூன்று மொழி படிக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்க தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு உள்ளது என்றும், உன் மொழி கல்விகள் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகனை பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார் ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரையும், பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையிலான பாஜகவினர் வரவேற்றனர். தொடர்ந்து மலைக்கோவிலுக்கு சென்ற இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்.

பழனி மலைக்கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அதேபோல பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் வருகை புரிந்தார். தனித்தனியாக வந்த இருவரும் மலைக்கோவிலுக்கு மேலே சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது வரவேற்கத்தக்கது. இந்து மக்கள்…

Read More
பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கும் விழா..

பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கும் விழா..

திண்டுக்கல் மாவட்டம் பழனி இரயிலடி சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக உணவு ஊட்டும் விவசாயத்துக்கு உயிரூட்டுவோம் என்ற தலைப்பில் விவசாய பெருமகனார்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து இந்நிகழ்வில் விவசாய தொழில் செய்து வரும் அனைத்து விவசாயிகளையும் பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி கௌரவப்படுத்தினர். மேலும் இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழக திரைப்படத்துறை நகைச்சுவை நடிகர் தாமு கலந்து கொண்டு விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகள்…

Read More
நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 03

நெஞ்சுக்கு நீதி ஆவணம் : 02

வணக்கம் தமிழக அரசியல் மூலம் நெஞ்சுக்கு நீதி வரலாற்று ஆவணத்தை உங்களுக்கு படம் பிடிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம். எழுதுவதற்கு நேரம் உள்ளதா என கலைஞர் அவரிடம் பலர் நெஞ்சுக்கு நீதி எழுதத் தொடங்கும் போது கேட்டனர். அப்போது அவருக்கு வயது 60 ஆண்டு 1985, 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்பட உரையாடல்கள், 10க்கும் மேற்பட்ட நாடகங்கள், பாடல்கள், முரசொலி இதழில் தொடர்களை உடன்பிறப்புகளுக்கு கடிதம் என அன்றைய காலகட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து…

Read More