உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு.
உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை- கோமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே 98/300-400 வது கி.மீ., சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டம், பழநி ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி,…
