எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களுக்காக, திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், நிதி திரட்டும் நிகழ்ச்சி!
திருநெல்வேலி,டிச.15:-நாகர்கோவில் புத்தேரியில் செயல்பட்டு வரும், “CBH மருத்துவமனை”யில் எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 160 குழந்தைகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், எச்ஐவி பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளின் நலன்கள், சிகிச்சைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக, பொதுமக்களின் உதவியைப் பெறும் வகையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடன்குளம் கிழக்கு பேருந்து நிலையப் பகுதியில் நிதி திரட்டும் நிகழ்ச்சி, இன்று (டிசம்பர். 15) நடைபெற்றது. இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி மற்றும் எச்ஐவி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியன, கிழக்கு…
