Headlines
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சுகந்தி ராஜகுமாரி அவர்களுக்கு பதவி உயர்வு :

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சுகந்தி ராஜகுமாரி அவர்களுக்கு பதவி உயர்வு :

செப் 5, கன்னியாகுமரி முன்னாள் குமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராகப் பணியாற்றியதும், தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள சுகந்தி ராஜகுமாரி அவர்கள், தமிழ்நாடு மருத்துவ கல்லூரி இயக்குநரகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த உயர்வினை அப்பகுதி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்தியுள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
மாவேலி வேஷம் – ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம்

மாவேலி வேஷம் – ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம்.

செப் 5 கன்னியாகுமரி கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலை, இராமன்பறம்பு பகுதியில் மின்மினி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 24-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, கேரளா பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலும், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவேலி வேஷமிட்டு தலையில் ஹெல்மெட் அணிந்து ஜெண்டை மேளத்துடன் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வரவேற்று பாராட்டினர். கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர்…

Read More
நாகர்கோவில் சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு

நாகர்கோவில் சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு.

செப் 5 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ கோணம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு சட்ட பேரவை தலைவர் திரு. அப்பாவு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். இத்துடன் கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும்…

Read More
செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் :

செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் :

செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள வ உ சி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருவருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நான் கார்த்திக் இ எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் திமுக தீர்மானகுழு உறுப்பினர் மு இரா செல்வராஜ் கலை இலக்கிய பகுத்தறிவு…

Read More
அமெரிக்க அரசின் அடாவடி வரி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

அமெரிக்க அரசின் அடாவடி வரி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

கோவையில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் 05/09/2025. மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை. தோழர் எம் ஆறுமுகம். CPI. EX. MLA. மற்றும் மற்றும் தோழர் எஸ் கிருஷ்ணமூர்த்தி. CPIM. மாவட்ட செயற்குழு அவர்கள் தலைமையில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது. செய்தியாளர் : தினேஷ்.P

Read More
கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல் :

கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல் :

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலங்குளம் பூலாங்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சூரன் மணி…

Read More
நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

செப் 4 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பாரதி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் சுப்பிரமணியம் என்பவர், அந்த தொழிலதிபரை பெரும் தொகை முதலீடு செய்வதாகக் கூறி ரூ.10 கோடி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்றது. ஆதாரங்கள்…

Read More
குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :

குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :

செப் 4 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் காப்பிகாடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாட்ஸப் குழுவில் இழிவாக பேசி, அவதூறு பரப்பியுள்ளார். இதை கண்டித்து, நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
காதல் கணவன் கைவிட்டதால் கை குழந்தையுடன் பெண் தர்ணா !. போலிசார் விசாரணை :

காதல் கணவன் கைவிட்டதால் கை குழந்தையுடன் பெண் தர்ணா !. போலிசார் விசாரணை :

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளி அருகே காதல் கணவன் கைவிட்டதால் கைக்குழந்தையுடன் கணவன் வீட்டு முன்பு அமர்ந்து மனைவி சூரியபிரியா (20) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. ஏற்கனவே நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்தப் பெண் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

Read More
குமரி பெருஞ்சுவர் – மறக்க முடியாத வரலாற்றுச் சின்னம் !

குமரி பெருஞ்சுவர் – மறக்க முடியாத வரலாற்றுச் சின்னம் !

தமிழர் வரலாற்றை ஆராயும்போது “குமரி” என்ற சொல் தவிர்க்க முடியாததாகும். சங்க இலக்கியங்கள், புராணக் குறிப்புகள், மக்கள் மரபுக் கதைகள் என பல்வேறு ஆதாரங்களில் குமரி பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு சுவடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள குமரியின் வரலாற்றில், பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய ஓர் அற்புதமான வரலாற்றுச் சின்னம் தான் குமரி பெருஞ்சுவர் (The Great Wall of Kumari). சுவரின் தோற்றம் மற்றும் புவியியல் பரப்பு செம்பவளம் ஆய்வுமைய தொல்லியல் கள ஆய்வாளர் டாக்டர் பைசல் வழங்கிய…

Read More