கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி குறைவு – விவசாயிகள் வேதனை.
செப் 27 கன்னியாகுமரி ஒருகாலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 10,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது. ஆனால், படிப்படியாக விவசாய நிலங்கள் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற உபயோகங்களுக்கு மாற்றப்பட்டதால், தற்போது அது 6,500 ஹெக்டேராக குறைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி ஆண்டுதோறும் இரண்டு பருவங்களில் நடைபெறுகிறது. அவை கன்னிப்பூ மற்றும் கும்பபூ. தற்போது கன்னிப்பூ பருவ நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக…
