தார் சாலைகளில் வெறும் மண்ணை மட்டும் கொட்டி நிரப்ப அதிகாரம் பெற்ற நெடுஞ்சாலைத்துறையே !
நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள சாலைகளின் நிலையானது நம்மை கற்காலத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய அளவிற்கு இருக்கின்றது. இது தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் நெடுஞ்சாலை துறை எடுப்பதாக இல்லை. மாறாக சாலைகளை சரி செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை அதில் உள்ள குழிகளை மண்ணைக் கொட்டி நிரப்புவதற்கு மட்டும் தான் எங்களது அதிகாரம் உள்ளது., என்கின்ற அளவில் பொறுப்பில்லாமல் அதிகாரிகள் பதிலளிக்கின்றன. கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக பெய்த மழையில்…
