திருநெல்வேலி மாவட்டம், முன்னீர் பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற : ‘நலம் காக்கும் ஸ்டாலின் !’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ! உயர்தர மருத்துவ சிகிச்சை பெற்றதால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கர்ப்பிணி தாய்மார்கள் !
திருநெல்வேலி, அக்.4:- ஏழை-எளிய மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே, இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை பெற்று, அதன் தொடர்ச்சியாக ஆரம்ப நிலையிலேயே நோய்களை கண்டறிந்து, உடனடியாக இலவசமாக உரிய சிகிச்சையை பெறுவதற்கு வசதியாக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட, மகத்தான மருத்துவ திடடம் தான், “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்டம் ஆகும். இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல், தமிழக அரசால் மாநிலம் முழுவதும், செயல்படுத்தப் பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், சனிக்கிழமை தோறும்…
