திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது!திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர்வழக்கறிஞர் கிருஷ்ணவேணி சின்னத்துரை முன்னெடுத்த நற்பணி!
திருநெல்வேலி,அக்.20:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், சிங்கநேரி ஊராட்சி “வடக்கு இளையார் குளம்” கிராமத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது.7) ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்து ஒன்றில், உயிர் தப்பிய இந்த சிறுவன் மீது, எட்டு மாதங்களுக்கு முன், கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.,தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது, சுவர் இடிந்து விழுந்ததில், சிறுவனின் சிறுநீரகப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. அதன் பின்னர், சிறுவன் நீண்ட நாட்கள்…
