Headlines
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செண்பகராமன்புதூரில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டுவண்டிப் பந்தயத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரா. மகேஷ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். திமுக மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர், இதனைப் பொதுமக்கள் திரளாகக் கூடி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Read More
ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? - நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? – நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

கன்னியாகுமரி, ஜனவரி 16: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சூழலியல் மற்றும் ஆரோக்கியக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அந்நிறுவனத்தின் திட்டங்களை முன்னின்று நடத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மணல் தோண்டி எடுக்கப்பட்டு கதிரியக்க தாதுக்கள் பிரிக்கப்படும் செயல்பாடுகளால் கடல் அரிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் விவசாய நிலங்கள் பாழாவது போன்ற…

Read More
நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில் ராமன்புதூரில் நேற்று (ஜனவரி 15) இரவு தனியார் அறக்கட்டளை சார்பில் 7-ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், ‘நிமிர்’ குழுவில் இணைந்து பொதுமக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்கள் ஜெயந்தி, ஆஷா பிரியா மற்றும் சுமதி அவர்களுக்கு, அவரது சேவையைப் பாராட்டி “சமூக சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இந்த விருதினை மருத்துவர் நாகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். காவல்துறைப் பணியுடன் சமூகப் பங்களிப்பிலும் சிறந்து விளங்கும் பெண்…

Read More
தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா: திவான் ஒலி பங்கேற்பு..

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா: திவான் ஒலி பங்கேற்பு..

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை: ஜன – 14 தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் ஆக கொண்டாடப்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி கனி தலைமையில் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான்…

Read More
மாநகர் கோவை மாவட்ட கழகத்தின் சார்பாக "திராவிட பொங்கல் விழா" 2026...

மாநகர் கோவை மாவட்ட கழகத்தின் சார்பாக “திராவிட பொங்கல் விழா” 2026…

கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், நேற்று(13.01.26) அன்று,கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை செந்தமிழ்ச் செல்வன் தலைமையில், வ.உ.சி. மைதானம் அருகே சிறப்பாக நடைபெற்ற திராவிட பொங்கல் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கணபதி பகுதி சார்பில் கலந்து கொண்டவர்கள் சிறப்பான வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர். இப்போட்டியை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் திரு,கணபதி ராஜ்குமார், வணக்கத்துக்குரிய கோயமுத்தூர் மாநகராட்சி மேயர் திருமதி,இரங்கநாயகி ராமச்சந்திரன், கோவை…

Read More
நீலகிரி மாவட்ட உதகையில் மோடி பொங்கள்..

நீலகிரி மாவட்ட உதகையில் மோடி பொங்கள்..

உதகை சட்டமன்றம் உதகை நகர் கஸ்தூரிபாய் காலனியில் பிரச்சார பிரிவின் ஏற்பாட்டில் அமைப்புசாரா பிரிவு மற்றும் உதகை நகர் மண்டல் ஒத்துழைப்பில் மோடி பொங்கல் கொண்டாடப்பட்டது. தாய்மை பொங்கல் என சிறப்பு பெயரோடு தாய் மண்ணிற்கும் தாய்மாரை காக்கும் பாரத பிரதமருக்கும் நன்றிசெலுத்தும் வகையில் கொண்டாடபட்டது. பட்டியலின மக்கள் வாழும் இந்த காலனி பகுதி மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் வாழும் பகுதியாகும். இந்த காலனியை சார்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பாக உயர்தர பச்சரிசி, வெல்ல…

Read More
திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்திய, மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில், மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்திய, மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி,ஜன.13:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று ( ஜனவரி.13) மாலையில், மாநகர காவல் ஆணையர் “முனைவர்” நெ.மணிவண்ணன் தலைமையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் புலன் விசாரணைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மை குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள்…

Read More
மதுரை - U.C பள்ளியில் பொங்கல் விழா..

மதுரை – U.C பள்ளியில் பொங்கல் விழா..

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள 200 வருடங்கள் கடந்த பழம் பெருமை வாய்ந்த U.C பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். இந்த பொங்கல் விழாவில் மாணவர்களுக்கு இடையே பல விளையாட்டு போட்டிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் தமிழின் பெருமையை உணர்த்தும் விதமாக தமிழ் பெயர்…

Read More
சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா..

சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா..

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தொட்டபெட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் கோலம் மற்றும் பொங்கலிட்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர். இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் திரு. அஜித்குமார், திரு. அய்யனார், திரு. முத்துக்குமார், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் திரு. கௌரிசங்கர் கூட்டுறவு சங்க செயலாளர், திரு. ராஜ்குமார் எழுத்தர்…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை.. அதிரடிசோதனை..!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை.. அதிரடிசோதனை..!

விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளமுருகன் அவர்கள் தலைமையில் 9 தனிப்படையினர் கொண்ட 50 போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து உட்கோட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: க.நந்தகுமார்.

Read More