கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ பறிமுதல், அனுமதியின்றி இயங்கும் பண்ணைக்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி, மார்ச் 7: கன்னியாகுமரி மாவட்டம் கடையல் மேலே முக்கு பகுதியில் கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ ஒன்றை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சிறைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதிகாரிகளைக் கண்டதும் வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறைபிடிக்கப்பட்ட இந்தக் கோழிக் கழிவுகள், ஆலஞ்சோலை பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் பன்றிப் பண்ணை ஒன்றிற்கு கொண்டு செல்ல முயன்றபோது அதிகாரிகளால் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கடையல் பேரூராட்சித் தலைவர்,…
