வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு.
வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையில் நடைபெறுவது வழக்கம். நேற்று காலை 11 மணிக்கு நடைபெற இருந்த விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தன நிலையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறியும், மேலும் கூட்டத்திற்கு வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பிடிஓக்கள் வேளாண்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவு…
