ரஷ்ய எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவின் ‘அனுமதி’க்காகக் காத்திருக்கும் நிலையிலா இந்தியா?
நடுக்கடலில் தேங்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கிக்கொள்ள, இந்தியாவிற்கு அமெரிக்கா 30 நாட்கள் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. உலகளாவிய பொருளாதார நலன் சார்ந்த இந்த அறிவிப்பு, தற்போது இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் இறையாண்மை சார்ந்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “சுதந்திர நாடான இந்தியா, தனது நாட்டு மக்களின் தேவைக்கான கச்சா எண்ணெயை யாரிடம், எப்போது வாங்க வேண்டும் என்பதற்கு அமெரிக்காவிடம் ஏன் அனுமதி பெற வேண்டும்?” என்ற கேள்வி தற்போது அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வலுவாக…
