Headlines
நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் தொகுதியில் ஆளும் திமுக கட்சி சார்பில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ். ஆஸ்டின் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தரப்பில் மட்டும் மூன்று வேட்புமனுக்களும், அதே கட்சியின் எம். சிவராஜ் தரப்பில் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொகுதி மக்களிடையேயும் அரசியல் களத்திலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே தொகுதியில் ஒரு கட்சிக்கு ஏன் இத்தனை மனுக்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம். இது எந்தவித உள்கட்சிப்…

Read More
மடத்துக்குளம் தொகுதி: திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் உற்சாகத்துடன் வேட்புமனு தாக்கல்!

மடத்துக்குளம் தொகுதி: திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் உற்சாகத்துடன் வேட்புமனு தாக்கல்!

மடத்துக்குளம், ஏப்ரல் 4: மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை முறையாக வழங்கினார். முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு ;வேட்புமனு தாக்கலின் போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி உடனிருந்தார். மேலும்,…

Read More
தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்

தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்.

விளவங்கோடு, ஏப். 4: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, கேரளாவைச் சேர்ந்த டி.டி. பிரவீன் என்பவரை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து, அந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறக் கோரி இன்று விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “விளவங்கோட்டில் காங்கிரஸுக்கு உள்ளூர் முகங்கள் இல்லையா?”, “கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர்களின் தியாகத்திற்கு இதுவே பரிசா?” என்ற கேள்விகளை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்,…

Read More
ஸ்டாலின் பிரச்சாரம்: ஸ்காட் வளாகம் மக்கள் வெள்ளம்..

ஸ்டாலின் பிரச்சாரம்: ஸ்காட் வளாகம் மக்கள் வெள்ளம்..

நாகர்கோவில், ஏப் 04: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், மனோ தங்கராஜ் மற்றும் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமோகமான திரள் மக்கள் பங்கேற்றதால், ஸ்காட் வளாகம் முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.உற்சாக கோஷங்களும், ஆதரவு முழக்கங்களும்…

Read More
யார் இந்த லாரன்ஸ்?

யார் இந்த லாரன்ஸ்?

பதவிக்காக அல்ல… கொள்கைக்காக வாழும் காங்கிரஸ் போராளி! அன்பு கலந்த வணக்கங்கள்! அரசியலில் பலர் பதவிக்காக வருகிறார்கள்.சிலர் புகழுக்காக வருகிறார்கள். சிலர் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கட்சியோடு இருப்பார்கள். ஆனால், சிலர் மட்டும் கொள்கைக்காக வாழ்கிறார்கள்… கொடியுக்காக ரத்தம் சிந்துகிறார்கள்… தங்கள் வாழ்க்கையையே இயக்கத்திற்காக அர்ப்பணிக்கிறார்கள். அப்படிப்பட்ட அரிதான அரசியல் மனிதர்களில் ஒருவர்தான் கன்னியாகுமரியின் உண்மையான காங்கிரஸ் போராளி — R. லாரன்ஸ் அவர்கள். காங்கிரஸ் என்பது அவருக்கு ஒரு கட்சி அல்ல… ஒரு உயிர் உறவு…

Read More
விளவங்கோடு வேட்பாளராக டி.டி.பிரவீன்: கவனத்தை ஈர்க்கும் காரக்கோணம் மருத்துவக் கல்லூரி வழக்கின் பின்னணி!

விளவங்கோடு வேட்பாளராக டி.டி.பிரவீன்: கவனத்தை ஈர்க்கும் காரக்கோணம் மருத்துவக் கல்லூரி வழக்கின் பின்னணி!

விளவங்கோடு தொகுதியின் வேட்பாளராக முன்னாள் சபை செயலாளர் டி.டி.பிரவீன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்புடைய வழக்கொன்று குறித்த தகவல்கள் தற்போது தேர்தல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருவனந்தபுரம் காரக்கோணம் டாக்டர்.சோமர்வெல் மெமோரியல் சி.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 28 மாணவர்களின் பெற்றோர்களிடம் சுமார் ரூ.7.22 கோடி பணம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முன்னாள்…

Read More
பழனி பங்குனி உத்திரம்: 150 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நடைபயணம்!

பழனி பங்குனி உத்திரம்: 150 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரிய நடைபயணம்!

குள்ளவீரன் பட்டி கிராம மக்கள் தீர்த்தக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்… பழனி, ஏப்ரல் 02:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தலைமுறை கடந்த பக்திஇத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குள்ளவீரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 மனை…

Read More
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு!

பழனி | ஏப்ரல் 02: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாடு பிராமண சமாஜம் தனது முழு ஆதரவை அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தச் சமாஜத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம், மாநிலத் தலைவர் ஹரிஹர முத்து தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துத் தலைவர் ஹரிஹர முத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு ஆட்சிமுறைக்கு ஆதரவு “தமிழக…

Read More
பழனி பங்குனி உத்திரத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் அன்னதானம்...

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: 5,000 பக்தர்களுக்கு ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் அன்னதானம்…

பழனி, ஏப். 02:திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா தற்போது விமர்சையாக நடைபெற்று வருகிறது. முருகப் பெருமானைத் தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனிக்கு வருகை தருகின்றனர். பிரம்மாண்ட அன்னதானம்:பக்தர்களின் வசதிக்காகவும், அவர்களின் பசியாற்றும் நோக்கிலும், ‘பழனி பாலன் நண்பர்கள் குழு’ சார்பில் பழனி கிரிவீதி பகுதியில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதயாத்திரையாக வந்த 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மூன்று வகையான சுவையான சாதங்கள் மற்றும்…

Read More
வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்: தேசியக் கட்சித் தொண்டர்களில் குழப்பம், தேர்தல் களத்தில் பின்னடைவு அச்சம்..!

வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்: தேசியக் கட்சித் தொண்டர்களில் குழப்பம், தேர்தல் களத்தில் பின்னடைவு அச்சம்..!

தமிழ்நாடு, ஏப். 2: தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், சில தேசியக் கட்சிகள் இன்னும் பல தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்காதது, கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகள் நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் சூழலில், “யார் வேட்பாளர்?” என்ற அடிப்படைத் தெளிவே இல்லாத நிலை உருவாகியிருப்பதால், நிலத்தடி மட்டத்தில் பணியாற்றும் தொண்டர்கள் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதிலும், பிரச்சாரத் திட்டங்களை முன்னெடுப்பதிலும் சிரமம் அனுபவித்து…

Read More