கனரக லாரி தடைக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் குடும்பங்களுடன் உரிமையாளர்கள் முற்றுகை.
வாழ்வாதாரம் பாதிப்பு குற்றச்சாட்டு; அனுமதி இல்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் கனரக டாரஸ் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இணைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு, தடை காரணமாக வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும், வாகனங்களை மீண்டும் இயக்க…
