காடேற்றி கிராம மக்களின் உருக்கமான கோரிக்கை.!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடேற்றி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பேருந்து சேவை இயக்கப்படாத நிலை நீடித்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குள் அமைந்துள்ள காடேற்றி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், இக்கிராமத்திற்கு அரசு போக்குவரத்து வசதி வழங்கப்படாததால், அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமம் காடேற்றி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தினமும்…
