திருநெல்வேலியில் 3 மாவட்ட தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்பு பயிற்சி! மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், துவக்கி வைத்தார்!
திருநெல்வேலி, ஜூன்.27:- தமிழ்நாடு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பாக, பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை சார்ந்த, தன் ஆர்வலர்களுக்கான பயிற்சி, இன்று [ஜூன்.27] திருநெல்வேலியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்தார்! இந்த பயிற்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் 7, தூத்துக்குடி மாவட்டத்தில் 6, கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 என மொத்தம் 24 மையங்களில் இருந்து, மொத்தம் 72 தன் ஆர்வலர்கள் பங்கேற்று, பயிற்சி பெற்றனர். பயிற்சியை…
