வாணியம்பாடியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லிஃப்ட் பழுதாகி கீழே விழுந்ததில் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கலீம் அஹமத் உயிரிழப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் கலீம் அஹமத்(37).இவர் வாணியம்பாடி கச்சேரி சாலை, கொத்துவால் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில்(முசப் லெதர் பினிஷர்ஸ்) கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தோல்களை தொழிற்சாலை முதல் தளத்தில் வைக்க லிஃப்ட் மூலமாக எடுத்து சென்றுள்ளார். அப்போது லிஃப்ட் முதல் தளத்தை அடைவதற்கு முன்பு பழுதாகி கீழே விழுந்துள்ளது. இதில் கலீம் அஹமத் கீழே விழுந்து மயங்கினார். உடனடியாகஅவரை சக தொழிலாளர்கள்…
