மீன்வலை உற்பத்தியாளர்களின் கோரிக்கை மனு..! “நூல், வலைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி நீக்கப்பட வேண்டும்” – முதலமைச்சரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர்.சுரேஷ் ராஜன்..
தமிழ்நாடு முதலமைச்சர் அன்புத் தளபதி மாண்புமிகு திரு. எம். கே. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவர் திரு. சுரேஷ் ராஜன் அவர்கள் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், மீன்வலை உற்பத்தியில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரி தொடர்பாக முக்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மீன்வலை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், மீன்வலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் “நூலுக்கு தனியாகவும், அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வலைக்கும்…
