அதிகாரிகளின் அலட்சியத்தால், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பரமேசுவரபுரம் கிராமத்தில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகும் குடிநீர்!
திருநெல்வேலி,அக். 4:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள, “பரமேசுவரபுரம்” கிராமத்தில், தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், குடிநீர் விநியோகக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீரானது சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, வீணாகி வருகிறது. இவ்வாறு வீணாகி வரும் குடிநீரில், சிலர் பண்டம் பாத்திரங்களை கழுவியும், வேறு சிலர் மாடுகளை குளிப்பாட்டியும், இதிலும் சிலர் இருசக்கர வாகனங்களை சுத்தப்படுத்தியும் வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளின் அலட்சியத்தால், மெத்தனப்போக்கால், தொடர்ந்து குடிநீர் வீணாகி வருவது, மக்களிடம் வேதனையை,…
