திருநெல்வேலி மாவட்டத்தில், விடியல் பயணம் திட்டத்தின் மூலம், நகரப் பேருந்துகளில் 18,76,98,703 மகளிர் பயணம் செய்து, பயன் பெற்றுள்ளனர்! மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தகவல்!
திருநெல்வேலி,அக்.10:- நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (அக்டோபர்.10) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தெரிவித்திருப்பதாவது:-“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், முதலமைச்சர் தன்னுடைய முதல் கையெழுத்தாக, “விடியல் பயணம் திட்டம்”என்னும் புதிய திட்டத்தை, துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், அரசு நகரப் பேருந்துகளில், அனைத்து மகளிரும், இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்! என்றும், ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும், பயணிக்கலாம்! என்றும், அறிவித்தார். வேலைக்கு செல்லும் மகளிருக்கு, இந்த புதிய…
