தேர்தல் வரை மூடமாட்டோம் என கவுன்சிலர் பேச்சு? — மக்கள் கடும் அதிருப்தி..
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டு, மீனாட்சி கார்டன் 2-வது தெரு கிழக்கு பகுதியில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் அமைப்புப் பணிக்காக தோண்டப்பட்ட பகுதி இதுவரை சரிசெய்யப்படாமல் திறந்த நிலையில் விட்டு பராமரிப்பு இன்றி கிடக்கிறது. மக்கள் பலமுறை புகார் அளித்தும், அந்த வார்டின் கவுன்சிலரை நேரில் சந்தித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், நகராட்சி அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அக்கறையற்ற போக்கை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு மேலாக, “அடுத்த உள்ளாட்சி…
