திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில், “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு!
திருநெல்வேலி,டிச.16: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சபாநாயகர் மு.அப்பாவு ஆசியுடன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முனைவர் ம.கிரகாம்பெல் வழிகாட்டுதலின்படி, ராதாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி!” தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள், இடையன்குடி ஊராட்சி வாக்குச்சாவடி எண்கள் 264 மற்றும் 265 பகுதிகளில், இன்று (டிசம்பர். 16) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு, திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து மற்றும் மாவட்ட திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்தார்….
