திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்!மேற்பார்வை பொறியாளர் நேரடியாக பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார்!
திருநெல்வேலி,நவ.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக (TNPDCL) திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் மின் கோட்ட “மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்” வள்ளியூர் “செயற்பொறியாளர்” அலுவலகத்தில், இன்று (நவம்பர்.7) காலையில் நடைபெற்றது. திருநெல்வேலி வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேசுவரி, தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, மின் பயனீட்டாளர்கள் அளித்த மனுக்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு, வள்ளியூர் கோட்ட செயற் பொறியாளர், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில்,…
