உடுமலையில், காட்சி பொருளான புறக்காவல் நிலையம்… பஸ் ஸ்டாண்டில் அச்சம்.!
உடுமலை,நவம்பர் 09: காட்சி பொருளாக உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசை நியமித்து உடுமலை பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர் அங்கு குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக புற காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த புறக்காவல் நிலையம் போலீசார் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது…
