திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்மழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! ஆற்றில் இறங்க, அருவியில் குளிக்க தடை! தயார் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள்! சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் கூட்டாக பேட்டி!
திருநெல்வேலி,நவ.24:- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் இடைவிடாத தொடர்மழை நீடித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபனாசம், மணிமுத்தாறு அணைகளும், மாவட்டத்தின் பெரிய குளமான மானூர் குளமும், வேகமாக நிரம்பி வருகின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் இறங்குவதற்கும், மணிமுத்தாறு அருவி மற்றும் அகஸ்தியர் அருவி ஆகியவற்றில் குளிப்பதற்கும், மாவட்ட நிர்வாகம் “தடை” விதித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார்…
