Headlines
நத்தம் பகுதியில் கல்குவாரிகளில் களிமவன இயக்குநர் ஆய்வு

நத்தம் பகுதியில் கல்குவாரிகளில் களிமவன இயக்குநர் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளம் எடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சில குவாரிகள் இயங்கி வருவதாகவும் தமிழர் தேசம் கட்சியினர் தொடர்ந்து புகார் மற்றும் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் நத்தம் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் திண்டுக்கல் கனிமவள உதவி இயக்குநர் செல்வசேகர் ஆய்வு மேற்கொண்டார். நத்தம் வட்டாட்சியர் பாண்டியராஜ், வருவாய் ஆய்வாளர்கள் தவமணி, துர்கா தேவி, வெள்ளையம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார், தங்கவேலு உள்ளிட்ட பலர்…

Read More
திருப்பரங்குன்றம் தர்கா - பேரணிக்கு அனுமதி மறுப்பு.

திருப்பரங்குன்றம் தர்கா – பேரணிக்கு அனுமதி மறுப்பு.

திருப்பரங்குன்றம் தர்கா தொடர்பாக பேரணி நடத்த கோரிய மனு தள்ளுபடி – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியாது. பொதுமக்கள் நலன் கருதியும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டும் காவல்துறை அனுமதி மறுத்தது சரியே – உயர்நீதிமன்றம் மதுரை கிளை. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
"தமிழ் வாழ்க" வாசகத்துடன் சுவரொட்டிகள்

“தமிழ் வாழ்க” வாசகத்துடன் சுவரொட்டிகள்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், தமிழ் வாழ்க என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள்… மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியை திணிக்காதே என்பதை சுட்டிக்காட்டும் விதமாக மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தும்மனட்டி ஊராட்சியில் பல்நோக்கு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தும்மனட்டி ஊராட்சியில் பல்நோக்கு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சியில் ரூ-20.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜீ மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Read More
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரங்குன்றாபுரத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 285 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும் வருகைப் பதிவேட்டினையும், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், இ.சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும்,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இன்று 20.02.2025 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மணை வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 120 நபர்கள் அழைக்கப்பட்டு, 90 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி. தலமையில்,அரசு எலும்பு முறிவு மருத்துவர் திரு.காமராஜ் , காது மூக்கு தொண்டை…

Read More
ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

ஆத்தூர் வட்டாரத்தில் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது காந்திகிராம வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு ஆத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.ராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அ.பாண்டியன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) செ. அமலா திட்ட விளக்க உரையாற்றினார். இதை அடுத்து திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்)…

Read More
வல்லம் ஒன்றிய சமூக நல ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

வல்லம் ஒன்றிய சமூக நல ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு ஈச்சூர் ஊராட்சி தலைவரான பரணிதரன் த.பெ. ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்து தலித் விரோத போக்கை கடைப்பிடித்தும் சாதியை மோதல்இருபிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்குதல் மற்றும் பட்டியலைனா பகுதியில் எவ்விததிட்டபணியு செய்ய மறுத்து அதிகார துவஷபிரயோகம் செய்து வருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவரின் காசோலை அதிகாரத்தை இரத்து செய்து ஊராட்சி நிர்வாகத்தை தங்களது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமெண அப்பகுதி கிராம மக்கள் சமூக நல ஆர்வலர் பிரசாந்த் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் தேமுதிக கொடியேற்று விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் தேமுதிக கொடியேற்று விழா.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சங்கராபுரம் நகரம் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் பிப்ரவரி 12 கழக கொடி அறிமுகம் படுத்தப்பட்டது 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா ஆண்டினை கொண்டாடுகின்ற வகையில் கழக பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கழக செயலாளர் அண்ணன்SS கருணாகரன் அவர்களின் ஆலோசனைப்படி சங்கராபுரம் நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நகரக் கழகச் செயலாளர் ராதாகிருஷ்ணன்…

Read More
செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவுன்படி எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செங்கோட்டை காவல்துறையினர் குற்றாலம் ரோட்டரி கிளப் சாதனா இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியானது எஸ் ஆர் எம் அரசு மகளிர் பள்ளியில் இருந்து தொடங்கி நெடுஞ்சாலை வழியாக செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலையை சுற்றியவாறு மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது நிகழ்ச்சியின் இறுதியில் செங்கோட்டை…

Read More