ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் :
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் – அழிஞ்சிகுப்பம் பகுதியை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் தீர்ப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற சி.என்.அண்ணாதுரை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ப.செந்தில் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர்…
