இதழ்கள்
தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா: திவான் ஒலி பங்கேற்பு..
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை: ஜன – 14 தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் ஆக கொண்டாடப்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி கனி தலைமையில் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான்…
மாநகர் கோவை மாவட்ட கழகத்தின் சார்பாக “திராவிட பொங்கல் விழா” 2026…
கோவை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், நேற்று(13.01.26) அன்று,கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை செந்தமிழ்ச் செல்வன் தலைமையில், வ.உ.சி. மைதானம் அருகே சிறப்பாக நடைபெற்ற திராவிட பொங்கல் திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கணபதி பகுதி சார்பில் கலந்து கொண்டவர்கள் சிறப்பான வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர். இப்போட்டியை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட அவை தலைவர் திரு,கணபதி ராஜ்குமார், வணக்கத்துக்குரிய கோயமுத்தூர் மாநகராட்சி மேயர் திருமதி,இரங்கநாயகி ராமச்சந்திரன், கோவை…
நீலகிரி மாவட்ட உதகையில் மோடி பொங்கள்..
உதகை சட்டமன்றம் உதகை நகர் கஸ்தூரிபாய் காலனியில் பிரச்சார பிரிவின் ஏற்பாட்டில் அமைப்புசாரா பிரிவு மற்றும் உதகை நகர் மண்டல் ஒத்துழைப்பில் மோடி பொங்கல் கொண்டாடப்பட்டது. தாய்மை பொங்கல் என சிறப்பு பெயரோடு தாய் மண்ணிற்கும் தாய்மாரை காக்கும் பாரத பிரதமருக்கும் நன்றிசெலுத்தும் வகையில் கொண்டாடபட்டது. பட்டியலின மக்கள் வாழும் இந்த காலனி பகுதி மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் வாழும் பகுதியாகும். இந்த காலனியை சார்ந்த சுமார் 150 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பாக உயர்தர பச்சரிசி, வெல்ல…
அணைப்பகுதியில் சமூக விரோதிகள் அட்டகாசம்: எச்சரிக்கை பலகை சேதம் – நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்?
கன்னியாகுமரி | ஜனவரி 14, 2026 கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு 1 அணைப் பகுதியில் சமூக விரோதிகளின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அணைப் பகுதியை அசுத்தப்படுத்தும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாக மாறியுள்ளது. சிற்றாறு 1 அணை வாயில் அருகே, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கடையல் பேரூராட்சி சார்பாக தூய்மையை வலியுறுத்தி “இங்கு குப்பைகளை கொட்டாதீர்” என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு…
மதுரை – U.C பள்ளியில் பொங்கல் விழா..
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள 200 வருடங்கள் கடந்த பழம் பெருமை வாய்ந்த U.C பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். இந்த பொங்கல் விழாவில் மாணவர்களுக்கு இடையே பல விளையாட்டு போட்டிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் தமிழின் பெருமையை உணர்த்தும் விதமாக தமிழ் பெயர்…
சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா..
நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தொட்டபெட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் கோலம் மற்றும் பொங்கலிட்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர். இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் திரு. அஜித்குமார், திரு. அய்யனார், திரு. முத்துக்குமார், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் திரு. கௌரிசங்கர் கூட்டுறவு சங்க செயலாளர், திரு. ராஜ்குமார் எழுத்தர்…
விழுப்புரம் மாவட்ட காவல்துறை.. அதிரடிசோதனை..!
விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளமுருகன் அவர்கள் தலைமையில் 9 தனிப்படையினர் கொண்ட 50 போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து உட்கோட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: க.நந்தகுமார்.
தமிழகத்தில் உரிய அனுமதியில்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழுப்புரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை…
விழுப்புரத்தில் உள்ள சட்ட உரிமை நீதி பாதுகாப்புச் சங்க அலுவலகத்தில் அச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 325 கல்குவாரிகளில் 25 மட்டுமே அனுமதி பெற்று இயங்கி வருகின்றன மற்றவை அரசுக்கும், சட்டத்திற்கும் புறம்பாக செயல்பட்டு வருவதாகவும் மேலும் இந்நிலை விழுப்புரம் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல்…
திருநெல்வேலி,ஜன.13:-திருநெல்வேலி, அபிஷேகப்பட்டியில் உள்ள, “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் வகையிலான “பொங்கல் திருவிழா” இன்று (ஜனவரி.13) பல்கலைக்கழக வளாகத்தில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ‘முனைவர்’ என். சந்திரசேகர் தலைமை வகித்தார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் கலா மற்றும் நிதி அலுவலர் சி. செல்வ குமார் ஆகியோர், முன்னிலை வகித்தனர். சிண்டிகேட் உறுப்பினர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து…
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குதூகல பொங்கல் விழா! ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!
திருநெல்வேலி,ஜன. 13:- ஒன்றிய திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய தலைவரும், வள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான ராஜா ஞான திரவியம் தலைமையில், இன்று (ஜனவரி.13) காலையில், “குதூகல பொங்கல் விழா” நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன்,முருகன், பொறியாளர்கள் கணபதிராமன், சாந்திகலா, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர்,முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர்கள் பொன்குமார் டெல்சி ஒபிலியா, தாய்செல்வி இளங்கோவன், ஜெயா, மகாலெட்சுமி, கவுன்சிலர் மல்லிகா…
