இதழ்கள்
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தேஜஸ் ரோட்டரி கோவை கே.எம்.சி.ஹெச் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் தேஜஸ் ரோட்டரி கோவை கே எம் சி ஹெச் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை முகாம் 6-02-2026 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.. கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் , புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதை தடுக்கும் வகையிலும் இந்த இலவச பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.. இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது –நகர்ப்புற…
படங்குனி திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் அவர்கள் தலைமையில், உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, பொன்னுச்சாமி , அழகிரிசாமி, பழனிச்சாமி , ஊர் பெரியதனக்காரர்கள் சண்முகம் , செல்லப்பாண்டியன், பெரியசாமி, அழகிரிசாமி, செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் இன்று 06.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் திருக்கோயில் வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. சித்திரை மாதம் படங்குனி திருவிழா நடத்துவது தொடர்பாகவும், திருவிழாவிற்கு பொதுமக்கள் பங்களிப்பு நிதி வழங்குவதும் , திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான சாமி…
குமரி குளங்களில் ரவுடிகள் ராஜ்ஜியம்: தாமரைப் பூ பறிக்க ரூ.5 லட்சம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் — அதிகாரிகள் மெத்தனப்போக்கா?
கன்னியாகுமரி, பிப்ரவரி 6: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான குளங்களில் தாமரைப் பூ பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஏழைத் தொழிலாளர்களை ரவுடிக் கும்பல் மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் தேரேகால்புதூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், தேரூர் மாணிக்கபுத்தேரி குளத்தில் தாமரைப் பூ பறித்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக, சிறையில் உள்ள தண்டனை கைதிகளின் தூண்டுதலின் பேரில், இளங்கடை புத்தன்குடியிருப்பைச்…
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலை சிற்றங்காடி திறப்பு…
நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலையின் சிறு கூட்டுறவு பல்பொருள் சிறப்பு அங்காடி நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மரு.தே.சித்ரா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அங்காடியை திறந்து வைத்த மண்டல இணைப்பதிவாளர் முதல் நுகர்வோராக கொள்முதல் செய்து விற்பனையை துவக்கி வைத்தார். மேலும் சிற்றங்காடியில் பல்வேறு சிறந்த கூட்டுறவு தயாரிப்பு பொருட்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது எனவும் பொதுமக்கள் இதனை பெற்று பயனடையுமாறும் கேட்டுக்கொண்டார்….
அஜித்குமார் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப் புகார் – சிபிஐ…
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் நகை திருடியதாக நிகிதா அளித்தது பொய்ப் புகார். அவரது மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. கைதான காவலர்கள் ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது சிபிஐ தரப்பு பதில். ஏதுமில்லாத விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள்; மனமே பதறுகிறது; ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்தே கொலை செய்துவிட்டனர். அஜித்குமார் மரண வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே…
அரசு பள்ளிகளில் அறிவியல் “விழிப்புணர்வு” நிகழ்ச்சிகள்…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,மஞ்சக்கம்பை அரசு உயர்நிலைப்பள்ளி, அரவேணு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அறிவியல் விழிப்புணர்ச்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டது. அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.கே….
பராமரிப்பின்றி பழுதடைந்த சமூகக் கழிப்பிடம்: வீணாகும் பொதுமக்களின் வரிப்பணம் – குமாரகோவில் ஊராட்சி நிர்வாகம் மீது புகார்…
கன்னியாகுமரி, பிப் 4:கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட குமாரகோவில் ஊராட்சியில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைக்காகக் கட்டப்பட்ட சமூகக் கழிப்பிடம், தற்போது முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் (Swachh Bharat Mission) கீழ் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இது கட்டப்பட்டது. பயன்பாட்டிற்கு வந்த சில காலத்திலேயே முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், தற்போது இந்தக் கழிப்பிடம் கடும் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில்…
பழனியில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை! அதிகாரிகள் அலட்சியம்! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!
பழனி RF ரோட்டில் செயல்பட்டு வரும் குமரன் பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் – ல் விற்பனை செய்யப்படும் பிரட் பாக்கெட்டில் விலை மற்றும் தயாரிப்பு தேதி (expired date) இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பழனி நகரம் ஆன்மிக நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பழனியில் உள்ள பேக்கரி , டீ கடைகள் , உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் என பல இடங்களில் சுகாதாரம் இல்லாமல்…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நீதி அரசர் ஜிஆர் சுவாமிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் , மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் மதுரை மாநகர் தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் கோவில் இணை ஆணையர் யக்ஞ நாராயணன் உள்ளிட்டோர் ஆஜராயினர். இதில் ஆஜரான மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நிபந்தனையற்ற…
மதுரை : ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ரவுண்டானாதால் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது…
மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் உள்ள மிகப்பெரிய ரவுண்டானத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது சில சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கு காயங்களும் ஏற்படுகிறது. அப்பகுதி அருகே பள்ளிகள் இருப்பதால் காலையும், மாலையும் பள்ளி வாகனங்கள் செல்வத்தில் மிகவும் சிரமங்கள் ஏற்படுகிறது. குறுகிய சாலையில் மிகப்பெரிய ரவுண்டானம் இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகிறது. ரவுண்டான அளவை குறைக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்…
