Headlines
திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருநெல்வேலி,நவ.13: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான, “விமன் இந்தியா மூவ்மெண்ட்” ( WOMEN INDIA MOVEMENT) அமைப்பின்,”செயற் குழு கூட்டம்” இன்று ( நவம்பர்.13) மாலையில், நகர தலைவி ஹமீதா அக்பர் தலைமையில், நடைபெற்றது. நகர செயலாளர் ஜன்னத், அனைவரையும் வரவேற்று பேசினார். இணை செயலாளர் ஜெஸிமா, முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட,…

Read More
திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!

திருநெல்வேலியில், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்!

திருநெல்வேலி,நவ.12:- “தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று (நவம்பர்.12) புதன்கிழமை காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, “அண்ணா விளையாட்டு அரங்கம்” அருகில் உள்ள, “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்தில், “மக்கள் குறை தீர்க்கும் முகாம்” நடைபெற்றது. இன்று நடைபெற்ற முகாமில், மொத்தம் ஆறு நபர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய…

Read More
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.12:- இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, இம்மாதம் (நவம்பர்) 4-ஆம் தேதி முதல், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (SPECIAL INTENSIVE REVISION- SIR) தொடர்பாக, கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) நிரப்பி, வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) திரும்பக் கொடுப்பது சம்பந்தமாக, இன்று ( நவம்பர். 4) காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக, கூட்ட அரங்கில், திருநெல்வேலி “மாவட்ட ஆட்சித்…

Read More
தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள்! இரண்டு ஆண்டுகளாக, கல்வி உரிமைத்தொகை ( RTE) பணம் வழங்காததை கண்டித்து போராட்டம்!

தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள்! இரண்டு ஆண்டுகளாக, கல்வி உரிமைத்தொகை ( RTE) பணம் வழங்காததை கண்டித்து போராட்டம்!

திருநெல்வேலி,நவ.12:- நாடு முழுவதும் தனியார் சுயநிதி பள்ளிகளில், “கல்வி உரிமை சட்டம்” எனப்படும் RTE ( RIGHT TO EDUCATION ACT) திட்டத்தின் கீழ், ஏழை- எளிய மணவர்கள் தங்குதடையின்றி, தங்களுடைய கல்விப்பயணத்தை தொடர்வதற்காக, மாணவ, மாணவியரின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தனியார் சுயநிதி பள்ளிகள், எவ்வித கல்விக்கட்டணமும் பெறாமல் 25 சதவீத இடங்களில், இத்திட்டத்துக்கான தகுதியுடைய மாணவ, மாணவிகளை ஆண்டு தோறும்,…

Read More
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த, 2025- ஆம் ஆண்டுக்கான 14- வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையை வரவேற்று காட்சிபடுத்திய சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த, 2025- ஆம் ஆண்டுக்கான 14- வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையை வரவேற்று காட்சிபடுத்திய சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி, நவ.1:- பாளையங் கோட்டை வ. உ. சி. மைதானம் உள்விளையாட்டு அரங்கில் இன்று (நவம்பர்.12) காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியல், திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகை தந்த, 2025-ஆண்டிற்கான 14-வது ஆடவர் ஹாக்கி, இளையோர் உலக கோப்பையினை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா சுகுமார், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் முன்னிலையில், விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் புடைசூழ வரவேற்று, காட்சி படுத்தினர். 2025- ஆம் ஆண்டுக்கான, 21-…

Read More
மத்திய பா.ஜ.க அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறது என்று கூறப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கண்டித்து, நீலகிரி மாவட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

மத்திய பா.ஜ.க அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறது என்று கூறப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கண்டித்து, நீலகிரி மாவட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

உதகை: உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. எம். ராஜூ அவர்கள் தலைமையில் நடத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு. முபாரக், கூடலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பரமேஸ்குமார், தோழமை கட்சிகள் நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் கூறியதாவது: “மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட அரசியல் முறைகேட்டின் கீழ்,…

Read More
நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்து! வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு S-I-R-ஐ எதிர்த்து நீலகிரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. #தமிழ்நாடு_தலைகுனியாது

Read More
உடுமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…

உடுமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…

உடுமலைநவம்பர் 11. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டமானது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான ஈஸ்வரசாமி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்றனர். பேட்டி -1பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்…

Read More
குமரி மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு, சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்! அல் காலித் தலைமையில் மீனாட்சிபுரத்தில் பெரும் தர்ணா!

குமரி மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு, சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம்!அல் காலித் தலைமையில் மீனாட்சிபுரத்தில் பெரும் தர்ணா!

நாகர்கோவில், நவம்பர் 10: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை, ஊழல் ஒழிப்பு, சமூகநீதி, மற்றும் விவசாய வளங்கள் பாதுகாப்பு கோரி அமைதியான தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் நடைபெற்றது. இதில் பூர்வகுடி கார்த்திகாவிற்கு ரூ.5 கோடி நிதி வழங்குதல், விவசாயிகளின் போர்வையில் நடைபெறும், ஆயிரம் கோடி மதிப்பிலான வண்டல் மண் முறைகேடுகளை தடுக்குதல், பட்டியல் இனத்தை சேர்ந்த…

Read More
நாகர்கோவில் 39வது வார்டில் “SIR” படிவம் பதிவு செய்யும் பணி– மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் முன்னெடுப்பு

நாகர்கோவில் 39வது வார்டில் “SIR” படிவம் பதிவு செய்யும் பணி– மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் முன்னெடுப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி 39வது வார்டைச் சார்ந்த தி.மு.க. மாமன்ற உறுப்பினர் திருமதி ரிஸ்வானா ஹிதாயத், பொதுமக்களின் வசதிக்காக “SIR” படிவத்தை பதிவு செய்ய உதவுவதற்காக சிறப்பு முகாமை தனது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளார். பதிவுகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தீர்க்கவும், 39வது வார்டைச் சார்ந்த இளைஞர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்ததுடன், உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத்துக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். தமிழக…

Read More