இதழ்கள்
அம்பேத்கர் வழியில் நாம் : நாகர்கோவில் விடுதலை சிறுத்தைகள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
நாகர்கோவில், திச. 04 நமது சமூக நீதிப் பயணத்தை வலுப்படுத்தும் “அம்பேத்கர் வழியில் நாம்” என்ற கருத்தரங்கம் இன்று மாலை நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையும், மைய மாவட்ட செயலாளர் மேசியா முன்னிலையும் வகித்தனர். கருத்தரங்கத்தில் தென் மண்டல துணை செயலாளர் பகலவன், மேலடு பொறுப்பாளர் தமிழினேன், கன்னியாகுமரி தொகுதி செயலாளர் சிறுத்தை தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு…
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து; உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு.
மனுதாரர் (இந்து மக்கள் கட்சித் தலைவர்) திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் -தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
மதுரையில் நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி ஜெய பாரதி பிடியில் மாநகராட்சி துணை ஆணையர் ஜெயினுலாபுதின் மற்றும் பணச் செல்வம்!?
மதுரை தயிர் மார்கெட்டில் ஒதுக்கு புறத்தில் வாழ்வாதாரத்துக்கா காய்கறி கடைகள் நடந்தி வரும் அப்பாவி வியாபாரிகள் பல போராட்டங்கள் நடத்திய பிறகு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் சென்று அவர்களுக்கு ஒதுக்கு புறத்தில் கடைகளை போட அனுமதி அளித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பற்றினார். தற்போது இவர் எப்படி இங்க கடை நடத்த முடியும் இவர்களை இங்கு கடை போட விடமாட்டேன் என்று சபதம் எடுத்து இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி…
கோவை மாவட்டம் பிரபலமான பள்ளியில் காதலுக்காக மாணவர்கள் அடிதடி.
கோவை மாவட்டம் (04.12.25) கணுவாய் அருகில் உள்ள பிரபலமான பள்ளியில் நேற்று(03.12.25) பள்ளி நேரத்தில் பள்ளிக்குள், இரண்டு மாணவர்கள் காதலுக்காக சண்டையிட்டுக் கொண்டதாக தகவல். இதில ஒரு மாணவனின் மூக்குடைப்பு. மற்றொரு மாணவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது, இதுபோன்று கைகலப்பு ஏற்பட்ட பின், சம்பவத்தை கவனிக்காமல், தூங்கிக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகம், மற்றும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து மேற்கொண்டு இது போல் எந்த ஒரு கைகலப்பும்,ஏற்படாமல் பள்ளி மாணவர்களின்…
நீலகிரி கூட்டுறவு இயக்கத்தின் தந்தை ராவ் பகதூர் எச்.பி. ஆரிகவுடர் – 132வது பிறந்தநாள் விழா.
நீலகிரி : டிசம்பர், 04. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உதகமண்டலத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை திரு. H. B. ராவ்பகதூர் ஆரிகவுடர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா கூட்டுறவுத்துறையின் சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர் திரு. முத்துக்குமார், துணைப்பதிவாளர்கள் திரு.அஜித்குமார், திரு….
நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள் அதிரடி சாலை மறியல் : 63 பேர் கைது – வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி முழக்கம்!
நாகர்கோவில், டிசம்பர் 04, 2025: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தின் பின்னணி:திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி, மாநிலம் தழுவிய அளவில் அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு…
திருநெல்வேலி வள்ளியூரில், அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில், புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம் கட்சியினர்!
திருநெல்வேலி,டிச.3:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள “மாறன்குளம்” பகுதியில், கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு வழக்கறிஞரும்,தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின், திருநெல்வேலி மாவட்ட தலைவருமான, “வழக்கறிஞர்”செ. இராச ரெத்தினம் செம்மணியின் 5-ஆம் ஆண்டு “நினைவு” தினம், இன்று ( டிசம்பர்.3) காலை கடைபிடிக்கப்பட்டது. அங்குள்ள அவரது நினைவிடத்தில்,”புரட்சி பாரதம்” கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே. நெல்சன் தலைமையில், செம்மணியின் திருவுருவப்படத்திற்கு, “மலர்” தூவியும், “மலர் மாலை” அணிவித்தும், “புகழ் அஞ்சலி” செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி…
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் நாதன், இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம் (NAAS) உறுப்பினர் ஆக தேர்வு!
திருநெல்வேலி,டிச.3:- இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம்(NAAS) என்பது, இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி அமைப்புகளில் ஒன்றாகும். மேலும், இது உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுறறுசசூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை மேம்படுத்த, ஒன்றிய அரசால் நிறுவப்பட்டு, தேசிய நலன்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ள,ஓர் உன்னத அமைப்பும் ஆகும். இந்த மேன்மைமிகு அமைப்பின் உறுப்பினராக, திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் “முனைவர்”எஸ். செந்தில்…
செங்கோட்டை அரசு வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு தென்காசி முழுவதும் பரபரப்பு..
தென்காசி டிசம்பர் 3 தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி இன்று காலை செங்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விவாதங்களை முடித்துக்கொண்டு அவரது அலுவலகம் அமைந்திருக்கும் தென்காசி நடு பல்க் அருகில் பேசிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அவரது அலுவலகம் அருகிலேயே வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் காவல்துறை விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு தென்காசியின் மையப் பகுதியான கூலக்கடை பஜார்…
சங்கரன்கோவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 6 வருடம் சிறை ரூ.1000 அபராதம்.. தென்காசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு..
தென்காசி, டிச – 03 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு தென்காசி மாவட்ட நீதிமன்றம் ஆறு வருடம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஜின்னிங் பேக்டரி தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சண்முகநாதன் (வயது 48) இவர் கடந்த 07.06.2019 அன்று அதே தெருவை சார்ந்த இரண்டு பள்ளி சிறுமிகளை மிட்டாய்…
