இதழ்கள்
ஆயக்குடியில் வரதமாநதி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ளது வரதமா நதி அணை. இந்த ஆண்டிற்கான பருவ மழை குறுகிய நிலையில் பெய்த காரணத்தினால் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை அப்பகுதி விவசாயிகள் கொண்டு சென்று தற்போது நெல் நடவு செய்துள்ளனர். இதனையடுத்து போதிய மழை இல்லாததால் அணை நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயம் இல்லாத பட்டிக்குளம் பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு…
இயற்கை – கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்
ராஜாகமங்கலம் துறையில் CFLI – ஹீல் இணைந்து சிறப்பான நிகழ்வு. ராஜாகமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம்: இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாகமங்கலம் துறை பகுதியில் CFLI மற்றும் ஹீல் நிறுவனம் இணைந்து தெருமுனை கூட்டம் நடத்தின. இந்த நிகழ்வில் இயற்கை வளங்களின் பாதுகாப்பை எடுத்துரைக்கும் ஒளிலாட்ட பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கலைப்பாடல்கள் பாடப்பட்டு, பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் ஹீல் நிறுவனத்தின் தலைவர் சிலுவை வஸ்தியன்,…
மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு முடங்கி மேடு என்ற பகுதியில் கட்டிடத் தொழிலாளியின் வீடு மின்சாரம் தாக்கி முழுமையாக சாம்பலானது..!
மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு முடங்கி மேடு என்ற பகுதியில் கட்டிடத் தொழிலாளராக வேலை செய்து வரும் சேகர் மற்றும் அவரது மனைவி அமுதா அவர்களின் வீடு இன்று சுமார் 11 மணி அளவில் வீடு மின்சாரம் தாக்கி முழுமையாக சாம்பலானது. எனவே, வீட்டில் உள்ள பொருட்கள் கிரைண்டர் மிக்ஸி ஃப்ரிட்ஜ் சிலிண்டர் பீரோ கட்டில் மற்றும் நான்கு பேர் வசியக்கூடிய உடைமைகளை அனைத்தும் முழுவதும் சாம்பலாக ஆகிவிட்டது. தற்போது உடுத்த துணி இல்லாமல்…
கோவை மாநகராட்சி 80-வது வார்டில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட உப்பு மண்டி வீதி, கெம்பட்டி காலனி பகுதியில், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை இந்தியா (2.0) (ஸ்வச் பாரத் மிஷன்-SBM) திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் திறப்பு விழா இன்று காலை,சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப. ராஜ்குமார் மற்றும் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி, புதிய…
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை புதுச்சேரி துணை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கண்காணிப்பு அலுவலர் (தென்மண்டலம்) திரு.தில்லைவேல் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
கன்னியாகுமரி, டிசம்பர் 13: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் இன்று (13.12.2025) புதுச்சேரி துணை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பொறுப்பு அலுவலர் (தென்மண்டலம்) திரு.பா.தில்லைவேல் அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –…
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் தலைமையிடத்தில் விருப்பமனு கொடுத்த, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்!
திருநெல்வேலி,டிச.13:- அடுத்த ஆண்டு( 2026) துவக்கத்தில் நடைபெறவுள்ள, சடடமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக, விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகினறன. அதன் அடிப்படையில், இன்று (டிசம்பர்.13) காலையில், சென்னை தேனாம்பேட்டை, காங்கிரஸ் மைதானத்தில் உள்ள, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான “சத்தியமூர்த்தி பவன்” அலுவலகத்தில், 2026- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன், தமிழ்நாடு…
நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம்: காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வலியுறுத்தல்!
நாகர்கோவில்,டிசம்பர் 13: நாகர்கோவில் மாநகரத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, சாலைகளை விரிவாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாகர்கோவில் நகரம் கடந்த 01.03.2019 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 49.10 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநகரம், இயல்பாகவே குறுகிய சாலைகளையே கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் சாலைகள் விரிவாக்கம்…
திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்!
திருநெல்வேலி,டிச.13:-திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் திருநெல்வேலி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம், இன்று (டிசம்பர். 13) நடைபெற்றது. காவலர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்குமாக, காலை 9 மணி முதல், பிற்பகல் 2 மணிவரையிலும், நடைபெற்ற, இந்த இலவச முகாம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் உத்தரவின்படி, நடைபெற்றது. இந்த முகாமில், உடல் பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு (RBS), இரத்த அழுத்த…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் SQI பெந்தகோஸ்தே பேராயத்தின்கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை மாவட்டத்தில் SQI பெந்தகோஸ்தே பேராயத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் SQI பேராயத்தின் தமிழ்நாடு பேராயர் எம் .மாசிலாமணி தலைமையில், SQIநேஷனல் ஒருங்கிணைப்பாளர் பேராயர்.எம் ஜான் ஜெயராமன்,மதுரை மாவட்டபேராயர் கே.சி. டேனியல் இருவரது முன்னிலை தாங்கி நடத்தினார்கள். கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியை SQI யின் ஆசிய பேராயர். B.ரமேஷ்பாலன் அவர்கள் கொடுத்தார்கள் இந்த விழாவில் அனைத்து தலைமை பேராயர்கள் , மண்டல பேராயர்கள் ,மாவட்ட பேராயர்கள், ரெவரன்ட்,…
பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி.
தீபம் எங்கே ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும்அரசுத் தரப்பு வாதம் தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆவணங்களையும் மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாத நிலையில், எப்படி தீபத்தூண் என முடிவு செய்யப்பட்டது?* தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அரசுத் தரப்பு வாதங்களை முன்வைக்கிறது இந்த வழக்கு முழுவதும் ஒரு புதிய பழக்கத்தை கொண்டு வருவதற்காக தொடரப்பட்டது கோயில் சொத்துகள் தொடர்பாக…
