அரசியல்
தவெகவை தடை செய்ய முடியாது: நீதிமன்றம்
விஜயின் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதில். கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார் மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்..
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே வழங்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் 16/10/2025 அன்று நடைபெற்றது. தமிழ் வர்ணன் தலைமையில், ஆசிரியர் அமைப்பை சேர்ந்த தங்கவேல்,குமார், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேலுமணி, பாலசுப்பிரமணியன் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் அம்சராஜ், தங்கப்பாண்டி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது..
பாளையங் கோட்டையில் நடைபெற்ற, “மகிழ்வித்து மகிழ்வோம்!”-தீபாவளி சிறப்பு விழா! தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி, மகிழ்வித்தனர்!
திருநெல்வேலி,அக்.16:- திருநெல்வேலி, சிவப்பிரகாசர் நற்பணி மன்றம் மற்றும் வேணுவனம் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, பாளையங்கோட்டை மகாராஜா நகர், “புனித அன்னாள்” மனவளர்ச்சிக் குன்றியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகிய இடங்களில், “மகிழ்வித்து மகிழ்வோம்!”-என்னும், தீபாவளி சிறப்பு விழாவினை, நடத்தின. அதன் ஒருபகுதியாக, இந்த இல்லங்களில் உள்ளவர்களுக்கு, விலையில்லா புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்விற்கு, “மூத்த வழக்கறிஞர்” கே.ஜெயபாலன் தலைமை வகித்தார். “கலை பதிப்பகம்”…
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், “விஜயாபதி” கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம்: “காணொளி” காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய “துணை முதலமைச்சர்”…
திருநெல்வேலி,அக். 16:- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரிடம் உள்ள, விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்திடும் வகையில், 14 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ள, சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு, “தமிழக துணை முதலமைச்சர்” உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, காணொளி காட்சி வாயிலாக, இன்று ( அக்டோபர்.16) காலையில், அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை,…
மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க15/10/2025 அன்று மடத்துக்குளம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 6,7,8,9,13,14,16,17,18 ஆகிய வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்… வருவாய் துறை சம்பந்தமாக 410 , கலைஞர் மகளிர் உதவித்தொகை சம்பந்தமாக 393 ,என மொத்தம் 865 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.. நிகழ்ச்சியில் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி,சமூக பாதுகாப்பு திட்டம்…
மதுரை-யில்: மேயர் பதவி விலகல்…
மதுரை மாநகராட்சி மேயர் |இந்திராணி பொன் வசந்த் பதவி விலகல் மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பில் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் மேயர் இந்திராணி பதவி விலகல் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு எதிரொலியாக, மேயர்இந்திராணி ராஜினாமா. 17ம் தேதி புதிய மேயர் தேர்வு* மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
தேரூர் பேரூராட்சி வழக்கில் உச்சநீதிமன்ற தடை!அமுதா ராணி விரைவில் தலைவியாக பொறுப்பு ஏற்கிறார்..
அக் 15 கன்னியாகுமரி : மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அவர்களின் முயற்சியால், டெல்லி உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சி தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார் அமுதா ராணி அவர்கள். சென்னையில், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…
உறுப்பினர் கல்வித் திட்டம்..!
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக 15.10.2025 நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆருகுச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஒசஹட்டி கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற உதமண்டலம் சரக துணைப் பதிவாளர் திரு. சி. அய்யனார் அவர்கள் தனது தலைமையுரையில், இந்த உறுப்பினர் கல்வித் திட்டம் வாயிலாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களின் கிராமங்கள் தோறும் சென்று அவர்களது தேவைகள்…
மதுரை தெருவில் சாக்கடை அடைப்பால் தெருவில் உள்ள மக்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி.
மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள அசோக் நகர் மூன்றாவது தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெரு முழுவதும் கழிவு நீர் வெளியேறி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்கள் எவ்வளவோ போராடியும் மதுரை மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும், இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அதனால் வெளியே வரும் கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாந்தி ,மயக்கம் ,காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல்…
குமரலிங்கம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கம் பேரூராட்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, வருவாய் கோட்டாட்சியர் குமார் வழிகாட்டுதலின் படி, வட்டாட்சியர் குணசேகரன் தலைமையில், தனி வட்டாட்சியர் கௌரிசங்கர், குமரலிங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா பானு ஆகியோர் முன்னிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 14/10/25 அன்று நடைபெற்றது.. முகாமில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 923 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.. இதில் 52 விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.. நிகழ்வில்…
