இதழ்கள்
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கிலோ ரூ 67 .50 க்கு விற்பனை.
செப் 07 : உடுமலை உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில் கிலோ ரூ 67. 50 விற்பனையானது.மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ- நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் 1.00852.50 கிலோ எடை உள்ள 4,107 தேங்காய்களை 19 வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். ஏழு விவசாயிகள் பங்கேற்ற நிலையில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூபாய் 67 50க்கும்…
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அருகேமுகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் வலம்வரும் கும்பல்சமூக வலைத்தளங் களில் வீடியோ வைரல்
செப் 07. உடுமலை: உடுமலை அடுத்துள்ள உள்ள மடத்துக்குளம் அருகே பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகமூடி கும்பல் ஒன்று அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.மடத்துக்குளத்தையடுத்த கிழக்கு குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சபரீஸ்வரன்(வயது 38).பர்னிச்சர் கடை வைத்துள்ளார். மேலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் மற்றும் 2 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.அவர்…
கடலூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முதுகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தம்பதியினர் ஆனந்த்ராஜ், கவிதா. இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு, கவிதா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் கவிதாவை அழைத்து வர சென்ற போது, கவிதாவின் முதுகில் ஆனந்த்ராஜ் கத்தியால் கூதியுள்ளார் இதில், பலத்த காயமடைந்த கவிதா பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளநர். பண்ருட்டி செய்தியாளர் R. விக்னேஷ்
வன உயிரின வார விழா – 2025 குலசேகரம் ஜான் பால் II பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
அக் 07, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட வனக்கோட்டத்தின் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் முனைவர் திரு. அன்பு, இ.வ.ப. அவர்கள் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் திரு. ஸ்ரீவல்சன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் படி, வனச்சரக அலுவலர்கள் திரு. இராமு (குலசேகரம்), திரு. முஹைதீன் (களியல்), திரு. கலைமணி (வேளிமலை) ஆகியோர் தலைமையில், ஜான் பால் II மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குலசேகரம் வளாகத்தில் 07.10.2025 அன்று மாலை வன உயிரின வார…
திருநெல்வேலி மாவட்டத்தில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்ற, “உங்களுடன் ஸ்டாலின்!”திட்ட சிறப்பு முகாம்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!
திருநெல்வேலி,அக்.7:- திருநெல்வேலி மாநகர் மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மற்றும் புறநகர் மாவட்டம் பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளன்குளம் ஆகிய இடங்களில், இன்று (அக்டோபர். 7) “உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இவ்விரு முகாம்களையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், கூறியதாவது:- ” உங்களுடன் ஸ்டாலின்!” திட்ட சிறப்பு முகாம்கள், மாநிலம் முழுவதுமுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் என,…
யானை தந்ததை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சி.
மதுரையில் யானை தந்தத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் மணிகண்டன், சுதாகர், ரகுநாத், சுப்பிரமணி, ரமேஷ் ஆகிய 5 பேர் கைது. ஜமீன் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் என்பவர் மூலமாக யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்றதாக அவர்கள் வாக்குமூலம். தற்போது ஜமினின் வாரிசு தலைமறைவு, அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்! மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
ராமாபுரத்தில் 2,000 பனை விதைகள் நட்டு விழா..வனத்துறை – கிராமபஞ்சாயத்து இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை..!
கன்னியாகுமரி, அக்.07: இன்று காலை கன்னியாகுமரி வனக்கோட்டம் உதவி வனப்பாதுகாவலர் அவர்களின் தலைமையில், வனத்துறை மற்றும் ராமாபுரம் கிராமபஞ்சாயத்து சார்பில் MGNREGA பணியாளர்கள் இணைந்து பனை மர நட்டுப் பணிகள் நடைபெற்றன. ராமசமுத்திரம் குளக்கரையில் மொத்தம் 2,000 பனை விதைகள் நட்டுவிடப்பட்டன.சுற்றுச்சூழல் சமநிலையை பேணவும், நீர்வளத்தை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, உள்ளூர் மக்களால் பாராட்டப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள், பனை மரங்கள் மழை நீர் உறிஞ்சுதலிலும், மண் அரிப்பைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தனர். தமிழக…
நாகர்கோவில் மாமன்றம் “ஃபார்முலா” லீக்!
அக் 07, கன்னியாகுமரி – நாகர்கோவில் மாமன்ற 39ஆம் வார்டு உறுப்பினராக இருக்கும் பாத்திமா ஹிதாயத் அவர்களின் கணவர் ஹிதாயத் தற்போது நகரம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார். பொதுமக்களிடமிருந்து “அத்தியாவசிய தேவைகளுக்காக” பல ஆயிரம் ரூபாய்கள் முதல் லட்சங்கள் வரை பெற்றுக்கொண்டு, தேவைகள் நிறைவேற்றாமல் பின் தட்டி கழிப்பவர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஹிதாயத்துடன் ஒரு பெண் பேசிய ஆடியோ வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், “நான் கொடுத்த ₹17,000க்கு ரசீது தரவே…
சி.ஐ.டி.யு சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்..
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு சுமை பணி தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட குன்னூர் வண்டிச்சோலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு அச்சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் C.வினோத் கண்டன உரையாற்றினார் டாஸ்மாக் மாவட்ட தலைவர் J.ஆல்துரை சி.ஐ.டி.யு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் வாழ்த்துரை வழங்கினர். அதில் டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் அனைவரும் கலந்து…
திருவிதாங்கோடு பள்ளி ஆண்டு பெருவிழா கொடியேற்றம்…
அக் 08 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆத்மீக சுடரொளி மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் வலியுல்லாஹ் (ர. அ) அவர்களின் ஆண்டுவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது அழகியமண்டபம் புஹாரியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக திருவிதாங்கோடு மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் பள்ளிவாசலுக்கு கொடி கொண்டு வரப்பட்டது நிகழ்ச்சிக்கு திருவிதாங்கோடு முஸ்லீம் ஜமாஅத் செயலாளர் செய்யது முஹம்மது அஸ்லம் தலைமை தாங்கினார், தலைவர் அன்வர் ஹுசைன் கொடி ஏற்றினார் நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு நேர்ச்சை…
