இதழ்கள்
நீலகிரி கூட்டுறவு இயக்கத்தின் தந்தை ராவ் பகதூர் எச்.பி. ஆரிகவுடர் – 132வது பிறந்தநாள் விழா.
நீலகிரி : டிசம்பர், 04. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உதகமண்டலத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை திரு. H. B. ராவ்பகதூர் ஆரிகவுடர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா கூட்டுறவுத்துறையின் சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர் திரு. முத்துக்குமார், துணைப்பதிவாளர்கள் திரு.அஜித்குமார், திரு….
நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள் அதிரடி சாலை மறியல் : 63 பேர் கைது – வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி முழக்கம்!
நாகர்கோவில், டிசம்பர் 04, 2025: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தின் பின்னணி:திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி, மாநிலம் தழுவிய அளவில் அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு…
திருநெல்வேலி வள்ளியூரில், அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில், புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம் கட்சியினர்!
திருநெல்வேலி,டிச.3:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள “மாறன்குளம்” பகுதியில், கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு வழக்கறிஞரும்,தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின், திருநெல்வேலி மாவட்ட தலைவருமான, “வழக்கறிஞர்”செ. இராச ரெத்தினம் செம்மணியின் 5-ஆம் ஆண்டு “நினைவு” தினம், இன்று ( டிசம்பர்.3) காலை கடைபிடிக்கப்பட்டது. அங்குள்ள அவரது நினைவிடத்தில்,”புரட்சி பாரதம்” கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே. நெல்சன் தலைமையில், செம்மணியின் திருவுருவப்படத்திற்கு, “மலர்” தூவியும், “மலர் மாலை” அணிவித்தும், “புகழ் அஞ்சலி” செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி…
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் செந்தில் நாதன், இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம் (NAAS) உறுப்பினர் ஆக தேர்வு!
திருநெல்வேலி,டிச.3:- இந்திய தேசிய வேளாண் அறிவியல் மையம்(NAAS) என்பது, இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி அமைப்புகளில் ஒன்றாகும். மேலும், இது உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுறறுசசூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில், அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை மேம்படுத்த, ஒன்றிய அரசால் நிறுவப்பட்டு, தேசிய நலன்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ள,ஓர் உன்னத அமைப்பும் ஆகும். இந்த மேன்மைமிகு அமைப்பின் உறுப்பினராக, திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் “முனைவர்”எஸ். செந்தில்…
செங்கோட்டை அரசு வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு தென்காசி முழுவதும் பரபரப்பு..
தென்காசி டிசம்பர் 3 தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி இன்று காலை செங்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விவாதங்களை முடித்துக்கொண்டு அவரது அலுவலகம் அமைந்திருக்கும் தென்காசி நடு பல்க் அருகில் பேசிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அவரது அலுவலகம் அருகிலேயே வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் காவல்துறை விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு தென்காசியின் மையப் பகுதியான கூலக்கடை பஜார்…
சங்கரன்கோவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 6 வருடம் சிறை ரூ.1000 அபராதம்.. தென்காசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு..
தென்காசி, டிச – 03 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு தென்காசி மாவட்ட நீதிமன்றம் ஆறு வருடம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஜின்னிங் பேக்டரி தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சண்முகநாதன் (வயது 48) இவர் கடந்த 07.06.2019 அன்று அதே தெருவை சார்ந்த இரண்டு பள்ளி சிறுமிகளை மிட்டாய்…
விழுப்புரம் மாவட்ட காவல்துறை ரோஷனை காவல் நிலையம்.. தனியார் டீ கடையில் தம்பதிகள் தவறவிட்ட 18 சவரன் தங்க நகைகளை மீட்டு அவர்களை வியப்பில் ஆழ்த்திய நெடுஞ்சாலை ரோந்து போலீசார்…
தாம்பரம் லட்சுமிபுரத்தில் வசிக்கும் சந்திரசேகர் என்பவரின் மனைவி பிரசாந்தி(30) என்பவர் திருவண்ணாமலையில் தனது உறவினர் சுப நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பும் போது திண்டிவனம் அடுத்த தனியார் டீ கடை அருகே தனது காரை நிறுத்தி டீ அருந்தி விட்டு செல்லும்போது தனது கையில் வைத்திருந்த கைப்பையை டீக்கடையிலேயே மறந்து வைத்து விட்டு சென்றதாகவும் அதில் 18 சவரன் தங்க நகை மற்றும் லேப்டாப் ஆகியவை இருந்ததாக கொடுத்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை ரோந்து எண் -1…
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்
கார்த்திகைத் திருநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. காவல் துறை முழு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலையைச் சேர்ந்த ராமரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது! நெல்லையில் 67 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பொருநை அருங்காட்சியகம்! டிசம்பரில் முதல்வர் திறந்து வைக்கிறார்! தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலியில் பேட்டி!
திருநெல்வேலி,டிச.1:- தமிழக நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இன்று ( டிசம்பர்.1) திருநெல்வேலியில், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-“தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும் வகையில், திருநெல்வேலியில் மொத்தம் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும், “பொருநை அருங்காட்சியகம்” பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன இந்த மாதம் (டிசம்பர்) “முதலமைச்சர்” மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்கிறார்.தமிழ் பெருங்குடி மக்களின் தொன்மை நாகரிகத்தை, உலகிற்கு பறைசாற்றும்…
SIR பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் பணியாளர்களை மிரட்டுவது சம்பந்தமாக உண்மைத் தன்மை கண்டறிய பாஜக களப்பணி.
திண்டுக்கல் : டிசம்பர்,01 திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் ஜி நேற்றைய தினம் SIR குறித்து முறைகேடுகள் நடைபெற்றதாகவும் BLO பணியாளர்களை மிரட்டுவதாகவும் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து தாசில்தாரிடமும் அழைத்து நிலவரத்தை கேட்டறிந்தார் அவர் கூறியது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மேலும் 11.12.25 கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிடும்படி 15 ஜனவரி மாதம் வரை பட்டியல் சீர்திருத்தம் நடைபெறும் என்றும் அதைத்தொடர்ந்து…
