Headlines
விழுப்புரம் கோட்ட போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 8.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது...

விழுப்புரம் கோட்ட போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 8.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது…

விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த தொழிலாளா் குடும்பங்களுக்கு ஓராண்டில் ரூ.8.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் தெரிவித்தாா். விழுப்புரத்திலுள்ள தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 3 தொழிலாளா் குடும்பங்களுக்கு நிதியுதவியை வழங்கி, மேலும் அவா் பேசியது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பணியாளா்கள் தங்கள் பணிக்காலத்தின் போதும், பணியில் இல்லாத போதும் உயிரிழந்தால், அவா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது….

Read More
கன்னியாகுமரி கடற்கரையில் புதிய புறக்காவல் நிலையம் மற்றும் 'குமரிக்காவலன்' திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்!

கன்னியாகுமரி கடற்கரையில் புதிய புறக்காவல் நிலையம் மற்றும் ‘குமரிக்காவலன்’ திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்!

கன்னியாகுமரி, டிசம்பர் 8 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கிலும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை புறக்காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கு. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜ் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார். இணையக்…

Read More
காவல்துறை–ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்து இணைந்து நடத்திய போக்சோ விழிப்புணர்வு கூட்டம்.

காவல்துறை–ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்து இணைந்து நடத்திய போக்சோ விழிப்புணர்வு கூட்டம்.

கன்னியாகுமரி, டிசம்பர் 7: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கோட்டார் கிளை இணைந்து நடத்தும் “நிமிர்” திட்டத்தின் கீழ் போக்சோ சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை கோட்டார் Y.M.J அலுவலக மேல் தளத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களின் வழிகாட்டுதலின் படி, நிமிர் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் திருமதி சாந்தகுமாரி (AHTU), நாகர்கோவில் உமன் போலீஸ் பிரிவு தலைமை காவலர் ஜெயந்தி, ஆஷா…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு பணிகள் தீவிரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு பணிகள் தீவிரம்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் இன்று மறைமுக நாசவேலை தடுப்பு பிரிவினர் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வெங்கடேசன் தலைமையிலான காவலர்கள் மற்றும் மோப்பநாய் ராணி உதவியுடன் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் போடக்கூடிய இடங்கள், நகர்ப்புற முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டனர்.

Read More
பாபர் மசூதி இடிப்பு நாள்: உடுமலையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

பாபர் மசூதி இடிப்பு நாள்: உடுமலையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

உடுமலை : டிசம்பர், 06. டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் SDPI கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி உடுமலை நகரம் சார்பாக உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி தலைவர் M.காதர்…

Read More
160வது வார விழாவையொட்டி மழை உடுமலை சார்பில் 180வது பனை விதை நடும் விழா

160-வது வார விழாவையொட்டி மழை உடுமலை சார்பில் 180-வது பனை விதை நடும் விழா.

குமரலிங்கம் : டிசம்பர் 06. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பெருமாள் புதூர் அணைக்கட்டு குமணன் துறை பகுதியில், மழை உடுமலையின் 160 வது தொடர் வாரம் , 180 வது நிகழ்வாக தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை மற்றும் மழை உடுமலை இணைந்து ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் தொடர் நிகழ்வு நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி தலைமையில், பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுமலை தமிழிசை சங்கம் செயலர்…

Read More
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம், கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது! முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம், கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது! முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன!

திருநெல்வேலி,டிச.6:- கடந்த 1992- ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர்.6) இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அவ்வாறு இடிக்கப்பட்டு, 33 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் கூட, முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும், இந்நாளில் தங்களுடைய கண்டனத்தை, வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று (டிசம்பர்.6) இந்நாள் கருப்பு தினமாகவும், பாசிச எதிர்ப்பு தினமாகவும், திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அனுஷ்டிக்கப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் சார்பாக, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில்,…

Read More
மதுரை JAM மகளிர் கல்லூரி சார்பாக உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிராத்தனை.

மதுரை JAM மகளிர் கல்லூரி சார்பாக உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிராத்தனை.

மதுரை ஜெ.ஏ.எம். மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக மகபூப்பாளையம் கல்லூரி வளாகத்தில் 2 கோடி ஸ்லவாத் சமர்ப்பண விழா, உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிரார்த்தனை மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் & தாளாளர் பள்ளப்பட்டி மௌலானா மௌலவி S.M.முஹம்மது அல்தாப் அலி உலவி தலைமையேற்றார், கல்லூரியின் கண்காணிப்பாளர் S.A. முஹம்மது அலி முன்னிலை வகித்தார் , கல்லூரியின் பேராசிரியர் மௌலவி ஹாபிழ் காரி மு.முஹம்மது முஹ்யித்தீன் தாவூதி இமாம், மதுரை-சிவகாசி…

Read More
புரட்சியாளர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து உறுதிமொழி! விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவு நாள் நிகழ்வு.

புரட்சியாளர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து உறுதிமொழி! விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவு நாள் நிகழ்வு.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, புரட்சியாளர் பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி, அண்ணன் திருமாவளவன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் நாகர்கோவில் மாநகர மாவட்ட சிறுத்தைகள் அனைவரும் ஒன்றிணைந்து நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் மாலை அணிவித்து பாசிசத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்: நெல்லை – கன்னியாகுமரி மண்டல துணைச் செயலாளர்…

Read More
மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்!

மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்!

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார். தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் வகையில் மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிய மேம்பாலம் நாளை (07.12.2025) திறக்கப்பட்டு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என பெயர் சூட்டப்படுகிறது! மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More