அரசியல்
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வாணியம்பாடி,ஜூன்.26- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மண்டலவாடி பகுதியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் பொதுமக்களின் வரவேற்பை பெற்று காரில் இருந்து இறங்கி நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட எல்லையான மாதனூரில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட கழக செயலாளர்…
கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை உதகை தி.மு.க அலுவலகத்தில் கொண்டாடிய கட்சி நிர்வாகிகள்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் அ இராசா MP அவர்கள், மற்றும் மாவட்ட பொறுப்பாளர் K.M. ராஜு அவர்களின் ஆலோசனைப்படி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு உதகை தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் K.M. ராஜு அவர்கள் கழக கொடியினை ஏற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி செம்மொழி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
பழனியில் புதிய பேருந்து சேவையை துவக்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சண்முக நதி, நெய்க்காரப்பட்டி, பெருமாள் புதூர், வழித்தடங்களிலும் பழனியில் இருந்து சண்முக நதி, பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, வழித்தடங்களிலும் பழனியில் இருந்து நெய்க்காரப்பட்டி, சண்முகம் பாறை, புளியம்பட்டி, ஆகிய மூன்று வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை துவக்கப்பட்டது. பழனி பேருந்துநிலையத்தில் இருந்து புதிய பேருந்துகளை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினர் I.P.செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பழனி நகர மன்ற தலைவர், பழனி நகர் மன்ற உறுப்பினர்கள்,…
ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மேல் பக்கத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணியை மாண்புமிகு வனம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மேல் பார்வையில் தமிழ்நாடு சட்டமன் பேரவை பொது நிறுவனங்கள் குழு த் தலைவர்..திரு.A.P. நந்தகுமார் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.திரு.ழு.பெ.கி.ரி. அவர்கள் செங்கம்.திரு. துரை. சந்திரசேகரன் அவர்கள் பொன்னேரி.திரு.ம. சிந்தனைச் செல்வன் அவர்கள்…
கொட்டாகுளத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை வீடுவீடாக கேக் பாக்ஸ் வழங்கி தொண்டரணி கொண்டாடினர்.
தென்காசி தெற்கு மாவட்டம் கொட்டா குளம் பகுதியில் மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென்காசி மேற்கு ஒன்றியம் கொட்டாகுளம் பகுதியில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் கொட்டாகுளம் இ.இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்கள் குற்றாலம்…
உளுந்தூர்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள ராஜாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு அவர்கள் தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமராஜ் முன்னாள் எம்எல்ஏ பிரபு…
ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார்.
தென்காசி ஜனவரி 30தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் வே ஜெயபாலன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராசா திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி ஒன்றிய பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்…
சீரிய நிர்வாக திறமையால், இந்தியாவுக்கே முன்மாதிரியாக, தமிழ்நாட்டை வழி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்!
திருநெல்வேலி,ஜன.28:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் [பிப்ரவரி] 6 மற்றும் 7 தேதிகளில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று [ஜன.28] காலையில், நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களின், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், திருநெல்வேலி மாவட்டத்துக்கான…
கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதலி வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 27.1.25மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்செவித்திறன் குறையுடைய 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 6000/- மதிப்பீட்டில் காதொலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டதுஇந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அவர்களின் தலைமையில் முடநீ க் கியல் வல்லுனர் செயல் திறன் உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
ஆளுநரை கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்.
தென்காசி ஜனவரி 7- தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக ஆட்சியையும் தமிழர்களையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து புறக்கணிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் கலை கதிரவன் மாவட்ட துணைச் செயலாளர்கள் கென்னடி கனிமொழி…
